tamilnadu

வங்கியில் நகை திருட்டு : வாடிக்கையாளர்கள் புகார்

திருப்பூர், மார்ச் 12- பல்லடம் அருகே தேசிய மய மாக்கப்பட்ட வங்கி கிளையில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளைத் திருடியதாக நகை மதிப்பீட்டாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம், பல்ல டத்தை அடுத்த கேத்தனூரில் தேசி யமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட்  வங்கி கிளை இயங்கி வருகி றது. இதில் கோவையைச் சேர்ந்த  சுதா என்பவர் கிளை மேலாளராக வும், திருப்பூரை சேர்ந்த சேகர்  என்பவர்  நகை மதிப்பீட்டாளராக வும் பணிபுரிந்து வருகின்றனர். இக் கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள்,  பொதுமக்கள் உள்ளிட்ட வாடிக் கையாளர்கள் சிலர் குடும்ப சூழல்  காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் என்பவர் அந்த வாடிக் கையாளர்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது  சிட்டா,

ஆதார் கார்டு ஆகிய வற்றை நகல் எடுத்து வந்து கொடுத்தால் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகை கடன்  உதவி வழங்குவதாக கூறியிருக் கிறார். அதனை நம்பி பலரும் நகை களை அவரிடம் கொடுத்து விட்டு  தங்களது வீடுகளுக்கு சென்று  மதிப்பீட்டாளர் கேட்ட ஆவணங் களை எடுத்து வந்து கொடுத்து நகை கடனை பெற்றுச் சென்றதா கவும் கூறப்படுகிறது.  இதனிடையே நகை மதிப்பீட் டாளரால் கடன் பெற்ற வாடிக்கை யாளர்கள் அந்த நகைகளை நகைக் கடைகளில் வாங்கிய போது குறிப்பிட்டிருந்த எடையும், கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி  கிளையில் கடன் பெற்ற அட்டை யில் குறிப்பிடப்பட்ட நகையின் எடை அளவும் மாறுபாடு இருந் தது. இது வாடிக்கையாளர் களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற் படுத்தியது, மிகுந்த அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

மேலும் இது  குறித்து கேத்தனூர் வங்கி  கிளைக்கு சென்று கிளை மேலா ளர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்ட றிந்தனர்.இதில் அங்கு நகை மதிப் பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் வாடிக்கையாளர்கள் அட மானம் வைக்க கொண்டு வரும்  நகைகளில் இருந்து ஒரு சிறு  பகுதியை வாடிக்கையாளர்க ளுக்கு தெரியாமல் வெட்டி திருடி எடுத்து வந்ததையும், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நகைக்கு உண்டான தொகையை திருப்பி செலுத்தி விடுவதாகவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகி றது.  இத்தகவல் அறிந்த நகைக் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வங்கி கிளை முன்பு திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்து காமநா யக்கன்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வங்கி  மேலாளர் மற்றும் சேகர் ஆகியோ ரிடம் விசாரணை மேற்கொண் டனர். பாதிக்கப்பட்டோர் வங்கி முன்பாக முற்றுகையிட்டு உடனடி யாக நகை மதிப்பீட்டாளர் சேகரை  கைது செய்ய வேண்டும், அவர் திருடிய நகைகளை மீட்டு தங்களி டம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்களிடம் போலீ சார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்ததை தொடர்ந்து  அவர்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்சனை குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.