tamilnadu

img

ஜெயலலிதாவின் நகை, நில ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதாவின் நகை, நில ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

சென்னை, பிப்.14 -  சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல்  செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் நகைகள், நில ஆவணங் கள் அனைத்தும் தமிழக அரசிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. வருமானத்துக்கு பொருந்தாத வகை யில் சொத்துக் குவித்த வழக்கில் மறைந்த  முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள்  பெங்களூரு, விதான சவுதாவில் உள்ள  அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன. கர்நாடக அரசின் வசமுள்ள ஜெய லலிதாவின் ஆபரணங்களை தமிழக அர சிடம் ஒப்படைக்கக் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு வழக்குச் செலவுக் கட்டணமாக ரூ. 5 கோடியை செலுத்திவிட்டு ஆபர ணங்களை பெற்றுக் கொள்ளலாம் என நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதனிடையே, சொத்துகள் தங்க ளுக்கே சொந்தம் என்று ஜெயலலிதா வின் அண்ணன் ஜெயக்குமார் மகன்  தீபக், மகள் தீபா ஆகியோர் கர்நாடக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். இதனால் பெங்களூரு, சிறப்பு நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீபக், தீபாவின் மனுக்களை ஜன.13 ஆம்  தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் அனைத்து ஆபரணங் கள், நிலப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பிப். 14, 15 ஆம் தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜன.29 அன்று உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதி மோகன் தனது தீர்ப்பில், “ஆபரணங்கள் அடங்கிய இரும்பு பெட்டிகள் எடுத்துச் செல்ல தமிழக அரசு போதிய போலீஸ் பாதுகாப்புடன் வர வேண்டும். இங்கிருந்து நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்து கொடுக்க வேண்டும். நகைகளை எடுத்துச் செல்லும்போது, அளவிடும் மதிப்பீட்டாளர்கள் உடனிருக்க வேண்டும்.  முழு நடவடிக்கைகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்” என கூறி யிருந்தார். அதன்படி, வழக்கின்போது முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், சுமார் 1,000 ஏக்கர்  நில ஆவணங்கள் அனைத்தும் வெள்ளி யன்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டன. முறையாக நகை கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தமிழக  அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.