tamilnadu

ஜாமீன் கோரி ஜெயக்குமார் மனு தாக்கல்

சென்னை,மார்ச் 4- சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி திமுக பிரமுகர் நரேஷ் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் அவர் சாலை மறியலில் ஈடுபட்டதாக 2-வது வழக்கிலும், ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்ததாக 3-வது வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இதில், திமுக பிரமுகரை தாக்கிய வழக்கிலும், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.