புதுதில்லி, பிப்.11- வங்கிகளில் ஜன்தன் கணக்குகளில் சேர்ந்துள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வங்கி இருப்பு தேவையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின் போது பி.ஆர்.நடராஜன், நாடு முழுவது முள்ள வங்கிகள், பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு டிஜிட்டல் பண வழங்கலுக்கு தேவையில்லாத கட்டணங்களை விதிக் கிறார்களா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் எழுத்துமூலம் அளித்த பதிலில், பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தில் துவங்கப்பட்ட கணக்குகள் உள்பட, அடிப்படை சேமிப்பு வைப்பு வங்கி கணக்குகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்படி, குறைந்தபட்ச கட்டணமில்லாத அடிப்படை வசதிகளும், வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டிய தேவையில்லை என்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார். அவர் மேலும் கூறுகையில், ஜன்தன் கணக்கு வைத்திருந்த நபர்களிடமிருந்து 2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 14 வரை யிலான காலத்தில் ஒரு மாதத்துக்கு நான்கு முறைக்கு மேற்பட்ட டிஜிட்டல் பற்று பரி வர்த்தனைகள் செய்ததற்காக, அவர்களிட மிருந்து ரூ.90.19 கோடி மதிப்பிலான கட்ட ணம் பெறப்பட்டுள்ளதாக பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது என்றும் 2020 ஜனவரி 1 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ மேற்சொன்ன மின்னணு பரிவர்த்தனை முறைகள் மூலம் செய்யப்பட்ட பரிவர்த்த னைகளுக்கு கட்டணங்கள் ஏதேனும் வசூ லிக்கப்பட்டிருந்தால் அதனை திருப்பி அளிக்குமாறு 30-08-2020 அன்று வெளி யிடப்பட்ட சிபிடிடி(CBDT) வழிகாட்டுதல்கள் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது என்றும், மேற்சொன்ன மின்னணு வழிமுறை கள் மூலம் செய்யப்படும் எதிர்கால பரிவர்த்த னைகள் மீதும் கட்டணங்கள் ஏதும் விதிக்கப் பட கூடாது என அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி பிரதம மந்திரி ஜன் தன் திட்ட பயனாளிகளுக்கு ரூ. 90.19 கோடியை பாரத ஸ்டேட் வங்கி, சிபிடிடி(CBDT) வழி காட்டுதல்களுக்கு இணங்க திருப்பி அளித்து விட்டது. மேலும் 2020 ஜனவரி 1 முதல் மேற்சொன்ன மின்னணு வழிமுறைகள் மூலம் நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் பெறுவதை நிறுத்தி விட்டது என்றும், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சிபிடிடி(CBDT) வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாரத ஸ்டேட் வங்கி திருப்பி அளித்த கட்டணங்கள் பற்றிய மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி தமிழ்நாட்டுக்குத் திருப்பி அளிக்கப்பட்ட தொகை ரூ.1.01 கோடியாகும். (ந.நி.)