சென்னை, ஜூன் 11- கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்த பொள்ளாச்சி யில் வாசுதேவன். செல்லம்மாள் தம்பதியருக்கு 1922ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி பிறந்தவர் ராதாகிருஷ் ணன். 5 வயதாகும் போது தனது தாயாரை இழந்தார். அதே பொள்ளாச்சியில்தான் கம்யூ னிஸ்ட் தலைவர் பாலதண்டா யுதமும் பிறந்தார். இளம் வயதி லேயே சுதந்திரப் போராட்டத் தில் ஆர்வம் கொண்ட பால தண்டாயுதம் பாலர் சங்கத்தில் செயல்பட்டு வந்தார். பாலர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஜனசக்தி முத லான இதழ்களை வாசிக்கத் தொடங்கி படிப்படியாக முற் போக்கு அரசியலில் ஈர்க்கப் பட்டனர். தீவிர வாலிபர் சங்கம் என்ற பெயரில் செயல்பட்ட இவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது; சோவியத் யூனிய னில் அமைந்ததைப் போல ஒரு சோசலிச சமூகம் இங்கு அமைய வேண்டும் என்று விரும்பினர். தனது 15வது வயதில் காங்கி ரஸ் மீது ஈடுபாடு கொண்டு அக்கட்சியில் தன்னை இணைத் துக் கொண்ட ராதாகிருஷ்ணன் அங்கு அவர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1937ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் தோழர் ஜீவா உரையாற்றினார். அன்றைய காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெய ரில் காங்கிரஸ் கட்சிக்குள்ளி ருந்து செயல்படுகிறார்கள். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி யைச் சார்ந்த ஜீவா உரையை கேட்கும் வாய்ப்பு ராதா கிருஷ்ணனுக்கு கிடைத்தது. ஜீவாவின் கருத்துத் தெளிவும், தீவிரமும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவரை கம்யூ னிஸ்ட் கட்சியின்பால் ஈர்த்தது.
கோவை சதிவழக்கு
கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றும் போது தான் கோவை சதி வழக்கு விசாரணைக்காக 19 வயதில் ராதாகிருஷ்ணனை காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். கோவை சதி வழக்கு குற்றவாளிகளாக 11 பேர் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த காலத்தில் கம்யூனிஸ்டு களை ஒடுக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டன. இதில் சென்னை சதி வழக்குக் கும், கோவை சதி வழக்கிற்கும் ஒரு தொடர்பு இருந்தது. சென்னை சதி வழக்கில், கட்சி யின் முன்னணி தலைவர்கள் மோகன் குமாரமங்கலம், பி.ராமமூர்த்தி, சி.சுப்பிர மணியம், சுப்பிரமணிய சர்மா, கேரளீயன், அனுமந்த ராவ், உமாநாத் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். சென்னை சதி வழக்கு சோதனையில் சிக்கிய ஆவணங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது
தான் கோவை சதி வழக்கு. இதில் தோழர் ராதாகிருஷ்ணன் சிறுவனாக இருந்ததால் அவரது மாமாவை துணைக்கு வைத்துக் கொண்டு, அவரை அப்ரூவராக மாற்ற காவல் துறை முயற்சித்தது. இது குறித்து தோழர் ராதா ஒரு நூலில் கீழ்கண்டவாறு எழுதி யுள்ளார். “ என் மாமா என்னை அவசரமாக அழைத்திருந்தார். அவரைப் பார்க்க சென்ற போது மாமாவுக்கு பக்கத்தில் மற்றொருவர் இருந்தார். பின்னர்தான் அவர் சிஐடி காவல்துறை நாராயணன் என்பதை தெரிந்து கொண்டேன். கோவை சதி வழக்கில் நான் சம்பந்தப்பட்டு இருக்கிறேன் என்ற நாராய ணன், என் மீது விசாரணை இருக்கிறது என்றும் அப்ரூ வராக மாறினால் மட்டுமே தப்பிக்க முடியும் என்றும் கூறி னார். நான் மவுனமாக இருந் தேன். என் மவுனம் எனது சம்ம தம் எனக் கருதி, எனது மாமா பொள்ளாச்சியில் இருந்து தனது காரில் என்னை பெரியநாயக்கன்பாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். என் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் அனைவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு ரகசியப் பணிகளை, அவர்க ளுடன் இணைந்து செய்திருக்கி றேன். அந்த ரகசியங்களை நான் கூறி விடுவேன் என்ற அச்சம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. நான் மனதை உறுதிப்படுத்திக் கொண்டேன். என்னை பார்த்து இவர்களை உனக்கு தெரியுமா? என்றார் மாஜிஸ்ட்ரேட். 3 பேரை மட்டும் எனக்கு தெரியும். அவர்கள் என்னோடு படித்த மாணவர்கள் என்றேன். உனக்கு ரகசியமாக செயல் படும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உண்டா எனக் கேட்டார். அப்படி எதுவும் கேள் விப்பட்டதில்லை என்றேன். நீ போகலாம் என்று மாஜிஸ்ட்ரேட் கூறிவிட்டார். தலைமறைவாக இருந்த கட்சியின் வழிகாட்டுத லில் தான் நான் இதை செய்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.
அப்ரூவராக்க முயற்சி தோல்வி
மாமாவும், காவலரும் என்னை காரில் ஏற்றினார்கள். ஏறியவுடன் என் மாமா தலையில் ஓங்கி அடித்தார். இன்னொரு விசாரணைக்கு முயற்சி செய்வோம், அதிலும் அப்ரூவராக மாறி சாட்சி சரியாகச் சொல்லவில்லை என்றால் இவனையும் சிறைக்கு அனுப்ப வேண்டியதுதான் என்று காவலர் கூறினார். இடையில் காவலர் காரில் இருந்து கீழே இறங்கிக் கொண்டார். அதன் பின்னர் பொள்ளாச்சியில் கார் எங்கள் கடைக்கு முன்னால் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி மாமா கடைக்குள் நுழையும் வரை காத்திருந்து, ஒரு சந்து வழியாக தப்பி தலைமறைவு வாழ்க்கை நடத்திய தோழர்க ளுடன் போய் சேர்ந்து விட்டேன்’’ இவ்வாறு ராதா கிருஷ்ணன் அந்த நூலில் குறிப் பிட்டுள்ளார்.
மத்திய சிறையில் அடைப்பு
தன்னுடைய 20 வயதில் ஜன சக்தியில் முழுநேர ஊழியராக பணியில் சேர்ந்தார் ராதா கிருஷ்ணன். 1948ஆம் ஆண்டு அன்றைய மத்திய ஆட்சியாளர் களால் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தடை செய்யப்படு வதோடு ஜனசக்தி இதழும் முடக்கப்பட்டது. அப்போது கைது செய்யப்பட்ட ராதா கிருஷ்ணன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு காவல் கைதியாக அழைத்து செல்லப்பட்டார். தோழர் ராதா சிறந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல. இந்தியத் தலை வர்கள் பலருடைய மேடை உரையை தமிழில் மொழி பெயர்த்தவர். தோழர் தான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது போலவே, அவரது 3 பெண் குழந்தைகளுக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்தார். சென்னைக்கு அருகே அம்பத் தூர் நியூ செஞ்சுரி காலனியில் தற்போது வசிக்கும் தோழர் ராதாகிருஷ்ணன் நாளை (13.06.2022) 101 வயதை எட்டு கிறார்.
- அம்பத்தூர் ராமு