கொல்கத்தா, மார்ச் 7- மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் மாணவர் சங்கத் தலைவர் அனீஷ்கான் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு வாலிபர் சங்கத்தினர் கொல்கத்தாவில் பேரணி நடத்தினர். இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் மீனாட்சி முகர்ஜி உள்ளிட்ட 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் அவர் கொடுங்காயமடைந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் மீனாட்சி முகர்ஜி காவல்துறை சித்ரவதைக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது. இதை மருத்துவ அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கை “மம்தா அரசிற்கு ஏற்பட்ட அவமானம்” என கட்சி தெரிவித்துள்ளது.