tamilnadu

img

குருவிகளின் கூடுகை - செல்வி. காயத்ரி சுவாமிநாதன்

பறவைகள் பறப்பதை ரசிப்பதை விட அவற்றின் குரல் தான் மனதிற்கு நெருக்கமாக கொண்டு  வருகிறது. எங்கோ தூரத்தில் அல்லது அருகில் மரத்தின் கிளைகளில் மறைந்து கொண்டு வைகறையையும், வெயில்காயும் மதியத்தை யும், அந்தியையும் பறவைகள் அல்லவா தரி சிக்கச் சொல்லித் தருகின்றன. ஏன்? இரவில் கூட  ஆந்தையின் குரல் அதன் தனிமைக்கு உலகின் தனிமைக்கு துணை போல் இல்லையா?  எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து எந்தப்  பறவையின் குரலும் மனதிற்கு நெருக்கமானதே. அதன் சிலிர்ப்பில் அதன் சிலிர்ப்பூட்டும் குரலால் வளர்ந்தவள் நான் என்றே சொல்லலாம். சிறு வயதில் இருந்தே குருவிகளின் சேட்டைகளை பார்த்து வளர்ந்தவள், குருவிகளின் கீச்... கீச்... சங்கீதத்தை கேட்டி ருக்கிறீர்களா..?, அவை வீட்டிற்குள் உரிமை யோடு வந்து செல்வதையும், தண்ணீர் பாத்தி ரங்களில் ஆனந்த குளியல் போடுவதையும் ரசித் திருக்கிறீர்களா..? இத்தகைய ரசனையோடு வளர்ந்ததால்தான்,இன்றும் நான் குருவிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

என் வீட்டுப் பகுதிகளில் ஏராளமான குருவி கள் முன்பு இருந்தன. துணிகளை உலர வைக்கும் கொடி கயிறுகள், முற்றத்தின் கம்பி கள், மொட்டை மாடிச் சுவர்கள்... என எங்கு  பார்த்தாலும் குருவிகள் தென்படும். முற்றத்தில்  அமர்ந்து அரிசி புடைக்கும்போது அதில் சிதறும்  அரிசிகளை, எனக்கு மிக அருகில் வந்து கொத்தித் தின்னும். அதுமட்டுமல்ல, நினைத்த  நேரம் எல்லாம் வீட்டிற்குள் வட்டம் அடிப்பது, மனிதர்களின் நடமாட்டத்தை கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் அமர்ந்திருப்பது எல்லாம் நடக்கும். ஆனால் இவை அனைத்தும் பல ஆண்டு களுக்கு முன்புள்ள கதை. ஒருகட்டத்தில் நானும்  மறந்துவிட்டேன். குருவிகளின் நடமாட்டத்தை கவனிக்க மறந்துவிட்டேன். வீட்டிற்குள் வட்ட மடித்த குருவிகள், திடீரென காணாமல் போயின. காணாமல் போனது மனிதர்கள் என்றால், தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வரலாம். ஆனால், காணாமல் போனது குருவிகள் என்பதால், அதற்கான சாதக  சூழ்நிலையை மட்டுமே என்னால் உருவாக்க முடிந்தது. 

ஒரு அழகிய மாலை பொழுதில் யாரு மில்லாத காட்டில் நடந்து கொண்டிருந்தேன், அப்போது திடீரென்று என் விழி முன்னே பல குருவிகள்  ஒரு மரத்தில் வட்டமடித்தன. குருவிகள் மனிதர்களோடு சேர்ந்து வாழும் சுபா வம் கொண்டவை.இவற்றால் மற்ற பறவை களை போல மனித நடமாட்டம் இல்லாத காட்டு  பகுதிகளில் வாழ முடியாது. உணவு, தண்ணீர், இனப்பெருக்கக் கூடுகள்... போன்ற சகல வசதிகளையும், மனிதர்களின் வாழ்விடத்தி லிருந்துதான் பெற்றுக்கொள்ளும்.  முன்பெல்லாம் வீடுகளில் அரிசி புடைக்கும்  பழக்கம் இருந்தது. அதனால் குருவிகளுக் கான இரை கிடைத்தது. ஆனால் இன்று அரிசி புடைக்கும் பழக்கத்தை அடியோடு மறந்து விட்டோம். அரிசி புடைத்தால் தானே குருவி களுக்கு உணவு கிடைக்கும்.  அதேசமயம் கிராமங்களிலேயே இன்று குளம்-குட்டைகள் வறண்டு போய்விட்டன. குழாய்களில் தண்ணீர் விநியோகம் நடக்கும் பெருநகரங்களில் குருவிகளுக்கான தண்ணீர் எப்படி கிடைக்கும். இன்றைய வெப்ப நிலையை சமாளிக்க, குருவிகள் பல முறை ஆனந்த குளியல் போட வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளில் பரபரப்பான சாலைகளிலும் பறவைகள் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக உணவூட்டிகள், தண்ணீர் கோப்பைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் செயற்கை கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பறவைகள் வந்து அமர்வதும், உண வூட்டிகளில் உணவு கொரிப்பதும் என நகர வாழ்க்கையிலும், பறவைகள் மனிதர்களோடு இணைந்து வாழ்கிறார்கள்.

அதே சமயம் தமிழகத்தின் மற்ற சில  பகுதிகளிலும் குருவிகள், அழிந்து வரும் உயிரினமாகவே கருதப்படுகிறது. பெரும்பா லான குருவிகளின் குரல் அவற்றின் குறுகிய மற்றும் இடைவிடாத பாடும் அழைப்பின் மாறு பாடுகள் ஆகும். வியர்வையிலும் முயற்சியி லும் உருவான வீடு,மனிதனாலும் உருவாக்க முடியாத குருவிக் கூடு. கூட்டமாய் திரிந்த  பறவைகள் எல்லாம் கூடு கட்டிக் கொண்டிருக் கின்றன மரக்கிளைகளில் ஒவ்வொரு கூட்டிலும் 2 பறவைகள், 2 பறவைகளின் வாயிலும் குச்சிகளைக் கவனித்திருக்கிறேன். ஒரு நாள் நானும் அப்படியே குச்சிகளை எடுத்து மரக்கிளைகளின் நடுவே கூடு கட்டி  வைத்தேன், மிகுந்த ஆர்வத்துடன் சிறிது நேரம்  கழித்துப் பார்த்தால் என் கூடே காணாமல் போயிற்று. தினமும் மாலை நேரம் தவறாமல் இப்பறவைகளைச் சந்திக்க வந்துவிடுவேன், அவைகளை எல்லாம் தினம் தினம் பார்த்துப் பார்த்து அவற்றின் மீதான ஆச்சர்யம் அதி கரித்துக் கொண்டே போனது, கலையாமல் இருக்கும் அவர்களின் கூட்டின் மீது.கீச்....கீச்... என்று பல குருவிகளின் சத்தம் எனக்கு அன்பு  மொழியாக கேட்டது. 

ல்லாம் மெளனமாய் தனது விழிகளை மூடியது பேரழகு. பின்பு அதே இடத்திற்கு அதிகாலை பொழுதில் அவற்றைச் சந்திக்கச் சென்றேன். பறவைகள் எல்லாம் மெல்ல வெளியில் வரத் தொடங்கின.. உணவு சேகரிக்கப் பறந்தன. இவர்கள் எல்லாம் அன்பானவர்கள்..அன்பு நிறைந்த உலகில் அன்பைப் பறிமாறிக் கொள் கின்றார்கள். அவர்கள் கூட்டில் என்னையும் சேர்த்துக் கொண்டு அன்பு மட்டுமே நிரந்தர  என்று எனக்கு கீச்.... கீச். மொழியின் மூலம் எனக்கு அளவற்ற அன்பை எனக்குத் தருகிறார்கள்.  எங்களது சுற்றங்களில் சூழ்ச்சிகள் இல்லை,  பற்றியதோ பசுமை நிறைந்த வாழ்க்கை”-வரி களுக்கு ஏற்ப பசுமையான வயல்வெளிகளில் இரைதேடி வந்த களைப்பு போக்க மின்கம்பி யில் வரிசையாய் அமர்ந்து, ஆரோக்கிய மான காற்றை சுவாசிக்கும் குருவிகள். அவை  நம்மோடு பேசினால் இப்படிப் பேசக்கூடும். “நீங்கள் எல்லோரும் எங்களுக்கு கைகொடுத்து உதவ கூட தேவையில்லை. ஆனால்,  கை கொடுப்பது போல் கொடுத்து எங்களைக் கீழே தள்ளி விட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எங்களை மதிப்பதால் நாங்கள் உயர்ந்து  விட போவதில்லை. நீங்கள் எங்களை இகழ்ந்தாலும், நாங்கள் தாழ்ந்து விட போவதில்லை. உங்களை வறுத்தி வற்புறுத்தி வரும் அன்பு எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் வலி உணர்ந்து எங்கள் மேல் அன்பு செலுத்தினால், அந்த அன்பு கூட வேண்டாம் எங்களுக்கு, இரண்டுமே அன்பல்ல. நம்பிய வர்கள் எங்களை ஏமாற்றினாலும் நாங்கள்  யாவரும் ஏமாறியதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை. எதிர்ப்பார்ப்புகள் இன்னும் எதிர்ப்பார்ப்பாகவே உள்ளது. மாற்றம் என்ற ஒன்றை மட்டும் எங்கள் மனம் தேடுகிறது.” 

சமூகத்திற்கு குருவிகளின் பங்களிப்பு என்னவென்றால், குருவிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கும், பூச்சி-புழு மற்றும் கொசுக்க ளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கும் சம்பந்தம்  இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதனால் குருவிகள் அதிகளவில் பறக்க ஆரம்பித்தால், பூச்சி-புழு, கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். அதேசமயம் குருவிகள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டால், உணவு சங்கிலியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் குருவிகள் வாழ, வழிவகை செய்ய வேண்டும்.  குருவிகள் இனப்பெருக்க விஷயத்தில் சுறு சுறுப்பானவை. ஒரு வருடத்திற்குள் 4 முறை இனப்பெருக்கம் செய்துவிடும். அதனால் குருவிகளின் மீது சிறிதளவு கரிசனம் காண்பித்தால்போதும், அவை இரண்டு ஆண்டு களில் அதிகளவில் பெருகிவிடும்.  இப்படி மனிதர்களின் வாழ்க்கை முறையை சார்ந்திருக்கும் குருவிகளுக்கு, மனிதர்களின் முரண்பட்ட வாழ்க்கைமுறையே எமனாக மாறிவிட்டது. இப்படி நம்முடைய இயல்பான வாழ்க்கை முறை, ‘நகரமயமாதல்’, ‘வெப்ப மயமாதல்’ போன்ற காரணங்களால் நவீன  வாழ்க்கை முறையாக மாற்றம் பெற்றது தான், குருவிகளின் அழிவிற்கு காரணம். நம்மீது  தவறை வைத்துகொண்டு தொழில்நுட்பத்தின் மீது பழியை போடுவதில் எந்த பிரயோஜன மும் இல்லை. 

குரல் கூவி, இவ்வையகத்தை எழுப்பி, பகல் முழுதும் இரைதேடி மாலையில் ஒரே கூட்டமாய்  தன் சகதோழர்களுடன் மரத்தில் கூடி அன்றாடம் காலையில் உற்சாகமாய் வேலைக்குச் செல்லும் மனிதர்கள், கால சக்கரத்தால்க கசங்கி, லெளகீக வாழ்க்கையில் ஓடி ஓடி சலிப் படைந்து மாலையில் வீடு திரும்பும் மனிதர்க ளுக்கு மத்தியில் காலையில் எழும் போதே உற்சாகமாய் கும்மாளமாய் குரல் கூவி, குருவிகளின் கூடுகையைப் பார்க்க நமது மனமும் உற்சாகம் ஆகும்.