tamilnadu

img

இளம் பேச்சாளர்கள் கிடைப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை

சென்னை, ஆக. 23- வரலாறு போற்றக் கூடிய பேச்சா ளர்களை உருவாக்கும் பேச்சுப்போட்டி யில் இளம் பேச்சாளர்கள் கிடைத்தி ருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள தூய தாமஸ் கல்லூரி அரங்கத் தில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதனன்று (ஆக. 23) நடைபெற்றது. மாநில சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அள வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி னார். பின்னர் அவர் பேசுகையில், கனல் தெறிக்கும் வசனங்களை பேசி தமிழர் களுக்கு உணர்வூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், பகுத்தறிவு கருத்துக்களை பட்டென சொன்னவர் பெரியார் எனவும் தெரி வித்தார். வரலாறு போற்றக்கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் பேச்சுப் போட்டியில் இளம் பேச்சாளர்கள் கிடை த்திருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற் கும் பெருமை எனக்கூறிய அவர், இளம் பேச்சாளர்களின் உரைகள் வருங்கா லங்களில் பலருக்கும் கையேடாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி னார். சமத்துவம், சகோதரத்துவம், சுய மரியாதை, பகுத்தறிவு என்று பண்பட்ட தமிழ் அறிவை எல்லா மாணவர்க ளும் பெற வேண்டும் என்று கூறிய அவர், வேற்றுமை இல்லாத நாட்டை நோக்கி நம் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என்றும் கூறினார். மனித நேயத்தை போற்றி மனதை அழுக் காக்கும் கருத்தியல்களை புறந்தள்ள வேண்டும் என்றும், நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் இளம் பேச்சாளர் களை கண்டறிந்து அவர்களை ஊக்கப் படுத்தி வருவதாக கூறிய அவர், திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மை யினர் நலனுக்காக பல பணிகள் செய்ய ப்பட்டுள்ளதாகவும் கூறினார்.