‘நீட்’ தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு தினம் வியாழனன்று (செப்.1) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமி பேசினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா, மாநிலக் குழு உறுப்பினர் தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.