மதுரை, ஜூலை 6- நோய் சந்தேகம் வந்தாமல் மறைக்கா மல் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்கும் முன் அரசுக்கு தெரிவித்தால் எளிதாக குணம டைய செய்யலாம் கொரோனா வைரஸ் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் போன்றது அதை எதிர்கொள்வது சவாலானாது என்று சுகாதாரத்துறை செய லர் ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தி யாளர்களிடம் கூறினார். நோய்த் தொற்று ஏற்பட்டால் மக்கள் மறைக்காமல் தெரிவிக்க வேண்டுமென் பது சரிதான். அதற்கான விழிப்புணர்வு மெல்ல... மெல்ல... தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்பதும் மறுப்பதற் கில்லை. ஆனால், அரசு ராஜாஜி மருத்துவ மனையில் தினம்தோறும் எத்தனை நோயா ளிகளுக்கு தொற்று சோதனை செய்யப்படு கிறது என்ற விவரத்தை மாவட்ட நிர்வா கமோ, மதுரை அரசு மருத்துவமனையோ வெளியிடுவதில்லை. இதை மறைப்பதற்கு என்ன காரணம். அதே போல் உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் மருத்துவமனை களில் பிசிஆர் கருவிகளை கொண்டு வந்து அங்கேயே சோதனை செய்வதற்கு என்ன தயக்கம். அவ்வாறு தாலுகா மருத்துவ மனைகளில் சோதனை செய்தால் தொற் றுள்ளவர்களை தாலுகாகளிலேயே தனிமை மையங்களை ஏற்படுத்தி தங்கவைக்க லாம். அவர்கள் வீணாக மதுரை மருத்துவ மனைக்கு அலைய வேண்டியதில்லை. இதைச் செய்வதற்கு தமிழக அரசு தயங்கு வது ஏன்?