புதுச்சேரி, ஜூலை 12- ‘‘ஒன்றிய அரசின் திட்டங்களை அதிமுக விமர்சிக்காமல், கட்சித் தலைமைக்கு வரவும், அதிகாரத்தை கைப்பற்றவுமே சண்டை போடுகின்ற னர். அவர்களுக்குள் நடக்கும் சண் டையில் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது சரியானதல்ல’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ் ணன் கூறியதாவது: ஒன்றிய அரசு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நடைமுறைப் படுத்தியுள்ளது. பாஜக இல்லாத மாநி லங்களிலும் ஆளாத மாநிலங்களி லும் ஒரே கட்சி ஆட்சி என்ற முறையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு சுகாதாரத் துறையை சரியாக கவ னிக்காமல் காரைக்காலில் சுகாதார எமர்ஜென்சி நிலை தற்போது அறி விக்கப்பட்டது. காலராவால் ஆயி ரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனாவுக்கு பிறகு கூட பொது சுகாதாரத்தை பலப்படுத்த பாதுகாப்பு பணிகளை பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்யவில்லை. திறமையற்ற அரசு இது என நிரூபணமாகியுள்ளது. பட்டி யலின- பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு உதவித்தொகையும் வழங்க வில்லை. இதை கண்டித்து ஜூலை 14-ஆம் தேதி கல்வித்துறை முன்பு மறியல் நடத்தப்படும். ரேசனில் அரிசி நிறுத்தப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்படும் என கூறினர். ரேசனில் அரிசி தராதது உட்பட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி தலைமை செயலகம் முன்பு மறியல் நடத்தப்படும்.
அதிமுக மோதல்
ஆட்சியில் - அதிகாரத்தில் அடித்த கொள்ளையையும், அதை பாது காப்பதையும், அதில் தலைமைக்கு வரவுமே அதிமுகவில் மோதல் நடக் கிறது. ஒன்றிய அரசின் பல திட்டங் களை அதிமுக விமர்சிக்கவில்லை. அவர்கள் அதிகாரத்தை கைப்பற் றவே சண்டை போடுகின்றனர். அதி முகவுக்குள் நடக்கும் அடிதடிக்கு, மற்றொருவர் மீதோ, இதர கட்சிகள் மீதோ குற்றம்சாட்டுவது சரியானதல்ல. சிபிஎம் புதுச்சேரி பிரதேச குழு வானது தற்போது புதுச்சேரி மாநிலக் குழு என மாற்றப்பட்டுள்ளது. நேரடி யாக மத்தியக் குழுவின் கீழ் இனி செயல்படும். இவ்வாறு ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்வில் மாநிலச் செயலா ளர் ஆர்.ராஜாங்கம், மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், எஸ்.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபு ராஜ், சத்யா உட்பட பலர் உட னிருந்தனர்.