அது ஒரு சின்னஞ்சிறிய அருகம்புல் விதை. பூமியின் ஆழத்தில் புதைந்து கிடந்தது. வெகுகால மாய் அது காத்திருந்தது. ஒரு சொட்டுத் தண்ணீருக்காய் ஏங்கியது. எப்போது பூமிக்குள் புதைந்தது என்று தெரியாது. அதன் ஞாபகத்தில் இங்கே ஒரு காடு இருந்தது. அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் அனைத்துவிதமான மரங்களும் செடிகளும் கொடிகளும் புற் களும் புதர்களும் இருந்தன. அதனால் வண்டுகள், பூச்சிகள், புழுக்கள், பறவை கள் விலங்குகள் என்று எல்லாவகையான உயிரினங்களும் நிறைந்திருந்தன. இரவும் பகலும் அங்கே உயிரினங்கள் சுதந்திர மாக அலைந்து கொண்டிருந்தன. எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தன. திடீரென ஒரு நாள் அங்கே ஒரு மனிதன் வந்தான். சிறிது நாட்களில் சில மனி தர்கள் வந்தார்கள். பிறகு பல மனிதர்கள் வந்தார்கள். கூட்டம் கூட்டமாக மனிதர்கள் வந்து குடியேறினார்கள். முதலில் மரங்களை வெட்டி குடிசை களை அமைத்தார்கள். செடி, கொடிகளை அழித்து விவசாயம் செய்தார்கள். பறவை களையும் விலங்குகளையும் கொன்று சமைத்துச் சாப்பிட்டார்கள். காட்டில் வேலி போட்டு சொந்தம் கொண்டாடினார்கள்.
உயரமான கட்டிடங்கள் கட்டினார்கள். தொழிற்சாலைகள் அமைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டை அழித்தார்கள். தங்களுக்காக மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தார்கள். அனைத்தையும் செயற்கையாகச் செய்து விடலாம் என்று நினைத்தார்கள். சுயநலமிக்கவர்களாக இருந்தார்கள். மழை பெய்யவில்லை. தண்ணீரை விலை கொடுத்து வாங்கினார்கள். விவ சாயத்தை மறந்தார்கள். உணவை இறக்கு மதி செய்தார்கள். தொழிற்சாலைகள் அதிக மானதால் காற்று மாசு உண்டானது. முகமூடி அணிந்தார்கள். புதிய புதிய நோய்கள் வந்தன. ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண் டார்கள். ஒருவருக்கொருவர் சண்டை போட்டார்கள். சாலைகள், தெருக்கள், கட்டிடங்கள் எல்லாம் காங்கிரீட் மயம். எங்கும் நெகிழி. ஒரு துளி மண் இல்லை. நெகிழிச்செடி களை வீட்டில் வைத்தார்கள். நெகிழிப் பூக்களைத் தலையில் சூடிக் கொண் டார்கள். மனிதர்கள் இயந்திரங்களைப் போல நடந்து கொண்டார்கள். இயந்தி ரங்கள் மனிதர்களை இயக்கின. கட்டளை யிட்டன. ஆனால் பூமியின் ஆழத்தில் அந்த அரு கம்புல்லின் விதை முழக்கமிட்டது. மனிதர்கள் பாவம்! சீக்கிரமே அழிந்து போவார்கள். பிறகு இயற்கையான காடுகள் அணி வகுத்து வருவோம். மனிதர்களின் தவறைச் சரி செய் வோம். அதுவரை சற்றுப் பொறுத்திருப்போம். (என்ரிக் ஆண்டர்சன் இம்பெர் எழுதிய குறுங்கதையைத் தழுவியது)