மோடி அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
சென்னை, நவ. 25 - நீட் தேர்வு எழுதுவதற்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2-வில் உயிரி யல் பாடம் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; பள்ளிக் கல்வி முறைக்கு வெளியே தனி யாக படித்து தேர்ச்சி பெற்றவர் களும் விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப் பது, தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடு என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது ஏழை- எளிய, கிராமப்புற மாணவர்கள், மருத்து வக் கல்வி பெறும் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கோ. அரவிந்த சாமி, மாநிலச் செயலாளர் க. நிரு பன்சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது:
மருத்துவக் கவுன்சிலின் விதிகள்
இளங்கலை மருத்துவக் கல்வி யில் (எம்.பி.பி.எஸ்) சேர்வதற்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடங் களை, செய்முறை பயிற்சியுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சி யாக படித்திருக்க வேண்டும். இந்த இரண்டு ஆண்டு படிப்பு வழக்கமான பள்ளிக்கல்வி முறை யில் இருக்கவேண்டும். திறந்த நிலை பள்ளிகள் அல்லது தனி தேர்வாளர்களாக இருந்து படித் திருக்கக் கூடாது. மேலும், 12-ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பிறகு, உயிரியல் மற்றும் பயோ டெக்னாலஜி படிப்பையோ அல்லது வேறு ஏதேனும் தேவை யான பாடத்தையோ தனியாக எடுத்துப் படித்திருந்தால், அது கணக் கில் எடுத்துக் கொள்ளப்படாது. மருத்துவப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் முந்தைய அமைப்பான ‘எம்சிஐ’ எனப்படும் இந்திய மருத்துவக் கவுன்சில் தான், (Medical Council Of India - MCI) இந்த விதிமுறைகளை வகுத்திருந்தது.
புதிய வழிகாட்டுதல்
ஆனால், தற்போதுள்ள தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission - MNC) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, பிளஸ் 2-வுக்கு இணையான வேறு பாடப்பிரிவுகளில் படித்து உயிரியல் பாடத்தைத் தேர்வு செய்யாத மாணவர்களும் மருத்து வம் அல்லது பிடிஎஸ் (பல் சார்ந்த படிப்பு) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத லாம். மேலும், 12-ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பிறகு, மருத்து வப் படிப்புக்கு தேவையான (இயற்பியல், வேதியியல், உயிரி யல் அல்லது உயிரியல்தொழில் நுட்பம்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தனியாக கூடுதல் பாட மாக எடுத்துப் படித்திருந்தாலும் போதுமானது. அவ்வாறு கூடுதல் பாடத்தில் தேர்ச்சி பெறுவோருக்கு என்எம்சி சார்பில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க முடியும்” என கூறப்பட்டுள்ளது.
பயிற்சி மையங்களின் கொள்ளை
இது, பள்ளிப்படிப்பை முடித்த வுடன் செய்முறை தேர்வுடன் கூடிய மேல்நிலை படிப்பில் உள்ள முக்கி யப் பாடங்களை படிக்காமல், பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தனித் தேர்வு மூலம் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிப்ப தாகும். நாடு முழுவதும் மாண வர்களை தனியார் பயிற்சி மையங் களை நோக்கித் தள்ளுவதாகும். இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய கிராமப்புற குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள்தான். ஒன்றிய அரசின் இந்த முயற்சி அனைத்தும் புதிய புதிய நீட் பயிற்சி மையங் களை உருவாக்கி பெருமுதலாளி கள் இலாபமடைய வழிவகை செய்வதுதான்.
கோட்டாவில் நடப்பது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரிலுள்ள தனியார் பயிற்சி மைய த்தில் மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகின்றனர், இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து, அண்மை யில் ‘தி இந்து’ ஆங்கில நாளேடு புள்ளிவிவரங்களை வெளி யிட்டிருந்தது. ராஜஸ்தானின் கோட்டா நகரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 15 ஆக இருந்தது என பிபிசி ஆய்வுச் செய்தி வெளியிட்டுள் ளது. மிகப்பெரிய வியாபார உச்சத்தை தொடும் அளவுக்கு கல்வி இன்றைக்கு மாறி வருவதை அந்த புள்ளி விபரங்கள் காட்டியிருந்தன.
கல்வி முற்றிலும் வணிகமயம்
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சமான கல்வியை வணிகமயமாக்கும் திட்டத்தின் அடிப்படையில், மருத்துவக் கல்வி யை முற்றிலுமாக வியாபார மாக்கும் அனைத்து முயற்சிகளை யும் ஒன்றிய அரசு தற்போது மேற்கொண்டுள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் தற்கொலை செய்யும் சூழலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
திரும்பப் பெறுக!
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க வில்லை. இந்நிலையில், நீட் போன்ற தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம், தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்க ளை ஏற்கவைக்கும் நிர்ப்பந்த மாகவே, தனித்தேர்வு முறை தெரி கிறது. உயிரியல் பாடத்திட்டத்தை கற்காமல் மேல்நிலைப் படிப்பை முடித்து, நீட் தேர்வு எழுத முடியும் என்பது, பள்ளிப் படிப்பின் கற்றல் அறிவை பாதியில் பறித்து, அனைத்தையும் வியாபாரமாக்கு வதுடன், நுழைவுத் தேர்வையும் திணிப்பதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு உள்ளது. இதனைத் திரும்பப் பெற வேண்டும். நீட் பயிற்சி மையங் களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட ஒன்றிய அர சின் இத்திட்டத்தை இந்திய மாண வர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.