லக்னோ, ஜூலை 23- உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு வாரத் திற்கு முன்பு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை, ஒரு கனமழையைக் கூட தாங்கா மல் ஒன்றரை அடி ஆழத்திற்கு பள்ளமாகி, சாலையே இரண்டாக உடைந்தது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், சித்ரகூடத்தில் இருந்து தில்லியை இணைக்கும் வகையில் ரூ. 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பில் 296 கிலோ மீட்டர் தூரத்துக்கு பந்தேல்கண்ட் நான்குவழிச்சாலை அமைக்கப் பட்டது. இந்த சாலைப்பணிகள் 28 மாதங்களில் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜூலை 16 அன்று ஜலான் மாவட்டத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இந்த எக்ஸ்பிரஸ் சாலையை நாட்டுக்கு அற் பணித்தார்.
இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் நேரம் மிகவும் குறைக்கப்பட்டுள்ள தாக திறப்பு விழாவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் சிரியா சலீம்பூர் பகுதி யில் கடந்த புதன்கிழமையன்று இரவு பெய்த மழையால், பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை யின் குறுக்கே, ஒன்றரை அடி ஆழத்திற்கு பள் ளம் ஏற்பட்டு, சாலையே இரண்டாக உடைந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வெளியான நிலையில், “இது தான் எக்ஸ்பிரஸ் சாலையா...? பிரதமர் மோடி திறந்த எக்ஸ்பிரஸ் சாலையின் லட்சணத்தைப் பாருங்கள்... கொஞ்சமும் தரமில்லாமல் மோச மான வகையில் போடப்பட்டுள்ள இந்த சாலை யைத் திறந்துவைத்து விட்டுத்தான் பிரதமர் மோடி அவ்வளவு பேச்சு பேசினாரா? என்று பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகின்ற னர். இந்நிலையில், சலீம்பூர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி நின்றதாகவும், அதன்காரண மாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில விரைவுச்சாலை மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சலீம்பூர் பகுதியிலுள்ள பந்தேல்கண்ட் சாலை மூடப்பட்டு, புல்டோசர்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் உதவியுடன் உடனடியாக சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் சாலை தற்போது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், உ.பி. எக்ஸ் பிரஸ்வே தொழில்துறை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் துர்கேஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
ரூ.14 ஆயிரம் கோடி திட்டத்தில் ஊழல்
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு?
பந்தேல்கண்ட் எக்ஸ் பிரஸ் சாலை, ஒரு மழை யைத் தாங்க முடியாமல் கரைந்து ஓடியதற்கும், ஆங்காங்கே பள்ள மாகி, இரண்டாக உடைந்ததற் கும், இந்த சாலைப்பணிகள் தரமாக மேற்கொள்ளப்படாத தும், அதில் நடந்துள்ள பல ஆயி ரம் கோடி ரூபாய் ஊழலுமே கார ணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரும், சமாஜ்வாதி கட்சித் தலை வருமான அகிலேஷ் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரிய மனிதர்களால் பந்தேல்கண்ட் விரைவுச்சாலை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திலேயே அதில் நடை பெற்ற ஊழல், பள்ளத்திலிருந்து வெளியே வந்து விட்டது” என்று சாடியுள்ளார். பந்தேல்கண்ட் விரைவுச் சாலை திறப்பு விழா நாளன்றே, பந்தேல்கண்ட் சாலைப் பணி கள் ஆதித்யநாத் அரசால் அரை குறையாக மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஊழல் நடந்துள்ளதாகவும் அகிலேஷ் குற்றச்சாட்டு எழுப்பி யிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
“பந்தேல்கண்ட் விரைவுச் சாலை திறக்கப்பட்ட சில நாட்களி லேயே குழிதோண்டிப் புதைக்கப் பட்டிருப்பது, சாலை அமைப்ப தில் ‘இரட்டை என்ஜின் பாஜக அ ரசு’ செய்துள்ள ஊழலுக்கு சாட்சி யாக மாறியிருக்கிறது. பாதியில் முடிக்கப்பட்ட பந்தேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்து வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என சமாஜ்வாதி கட்சி சார்பிலும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. வருண்காந்தி யும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். “ரூ. 15 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை, 5 நாள் மழைக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போனால், அதன் தரம் குறித்து ஏராளமான கேள்விகள் எழு கின்றன. இத்தனை மோசமான தரத்தில் சாலையை அமைத்த திட்டத்தின் தலைவர், சம்பந்தப் பட்ட பொறியாளர், அதிகாரிகள் ஆகியோர் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனது தனது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.