மதுரை, செப்.22 - சிவகங்கை மாவட்டம் கீழடி அக ழாய்வில் தந்தத்தால் ஆன விளை யாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருட்கள் செவ்வாயன்று கண்டறியப்பட்டது. கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ஆம் தேதி முதல் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே கீழடியில் பத்து குழிகள் தோண்டப் பட்டு, சுடுமண் மனித தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை, காதில் அணி யும் அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. இந்த நிலையில், செவ்வாயன்று 203 செ.மீ முதல் 215 செ.மீ வரை யிலான ஆழத்தில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக் காய் கண்டறியப்பட்டுள்ளது. தந்தத் தால் செய்யப்பட்ட ஆட்டக்காயின் பக்கவாட்டுப்பகுதிகள் சற்று குழி வாக உள்ளது. இதன் உயரம் 2.5. செ.மீ. எனக் கூறப்படுகிறது. சேதமடைந்த துருப்பிடித்த நிலை யில் இரு துண்டுகளாக இரும்புக் கத்தி கண்டறியப்பட்டுள்ளது. கத்தியின் முனைப்பகுதி உடைந்து காணப்படு கிறது. ஒப்பீட்டளவில் தடிமனாகவும் மற்றொருபுறத்தில் தட்டையாகவும் உள்ளது.
0.4 செமீ தடிமன் கொண்ட ஆண்டி மணியால் ஆன ஒப்பனைக்கருவி கண்டறியப்பட்டுள்ளது. 10.1 செமீ அளவிற்கு ஒரு பக்கத்தில் வளைந்துள் ளது, வளைந்த பகுதியைத் தவிர்த்து அது 12.6 செமீ நீளம் கொண்டதாக உள்ளது. 215 செ.மீ., ஆழத்தில் செவ்வக வடிவிலான செப்பு தொங்கட்டான், உள்ளிட்ட பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டெ டுக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை தந்தத் தால் ஆன பெரிய மணி கண்டெடுக் கப்பட்டது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப் படுகின்றன. இந்த மணி 5.6 செ.மீ. நீளம் 4 செ.மீ. அகலம் கொண்டதாக உள்ளது. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. இதன் மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு மென்மையாகக் காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக உள்ளன. இதனைக் கைப்பற்றிய தொல்லியல் ஆய்வாளா்கள் தொடா்ந்து அப்பகுதி யில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இது குறித்து கீழடி அகழ்வாரா ய்ச்சி இயக்குநர் ஆர்.சிவானந்தம் கூறு கையில், தற்போது கண்டறியப் பட்டுள்ள கருவிகள் மற்றும் கை வினைத்திறன் வேலைபாடுகளுடன் கூடிய பொருட்கள் கீழடி ஒரு செழிப் பான வர்த்தக மையமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது என்றார்.
கொந்தகை
கொந்தகையில் கடந்த மூன்றாம் கட்ட அகழாய்வில் இருபது பாத்தி ரங்கள், கிண்ணங்கள், மூடிகள், சின்ன பானைகள் போன்றவை கண்டெடுக் கப்பட்டன. தற்போது இறந்தவர்களை புதைக்கும் இடத்தில் 20 வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. இவை இறந்தவர்களின் நினைவாக, அவர் களின் விருப்பத்தை நிறைவேற்ற அவரோடு சேர்த்து புதைக்கப்பட்டி ருக்கலாம். 87 சென்டிமீட்டர் உயரமுள்ள ஒரு பானையில் தரையில் இருந்து 61 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறி யப்பட்டது. அதில் மனிதனின் மண்டை ஓடு, கீழ் தாடைப் பகுதி எலும்புகள் இருந்தன. இந்தக் கலசத்தோடு எட்டு சிறிய பாத்திரங்கள் கண்டெடுக்கப் பட்டன. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஆர். காவியா கூறுகை யில், “இந்தப் பாத்திரங்களில் ஒன்றில் (நெல்) உமி இருப்பது கண்டறியப் பட்டது இதுவே முதல் முறை. கார்பன்- 14 டேட்டிங் முறையுடன் உமிகளைச் சோதிப்பதன் மூலம் பாத்திரத்தின் வய தைக் கண்டறிய முடியும் என்றார்”. மற்றொரு பானையில் மண்டை ஓடு, எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இந்த எலும்புகள் பண்டைய டிஎன்ஏ ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளன.