tamilnadu

img

ஈரானை தாக்கி இஸ்ரேல் அடாவடி!

ஈரானை தாக்கி இஸ்ரேல் அடாவடி! 

ராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் படுகொலை மத்திய கிழக்கு ஆசியாவில் பெரும் போர் வெடிக்கும் அபாயம்

தெஹ்ரான், ஜூன் 13 - தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட ஈரான்  நாட்டின் பல பகுதிகளில், இஸ்ரேல் ராணு வம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏவுகணைகளை ஏவி 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிகர காவல்படை யின் தலைவர் மற்றும் ஈரானின் மிக முக்கியமான தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ஹொசைன் சலாமி, ஆயுதப் படை களின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாகெரி, ராணுவ மத்திய தலைமையகத்தின் தலைவரும், புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதியுமான ஜெனரல் கோலம் அலி ரஷித் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிரட்டலுக்கு எதிராக ஈரானின் ராணுவத்தை பலம் வாய்ந்ததாக உருவாக்கியதில் இவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத் தளபதிகள் மட்டுமின்றி இந்த  தாக்குதல்களில் பெரெடூன் அப்பாசி, முக மது மெஹ்தி தெஹ்ரான்சி, அஹ்மத்ரேசா ஜொல்பாகரி மற்றும் அப்துல் ஹமீது மினூ செஹர் போன்ற முக்கிய ஈரானிய அணு விஞ்ஞானிகளும் உயிரிழந்தனர்.  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பின ரான அப்பாசி, ஏற்கெனவே 2010-இல் நடந்த ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளான அப்துல் ஹமீது மினூ செஹர், அஹ்மத் ரேசா ஜொல் பாகரி, சையத் அமீர் ஹொசைன் பாகி, மொடப்ளிசாதே, முகமது மெஹ்தி தெஹ்ரான்சி, பெரெடூன் அப்பாசி ஆகியோரும், இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் ஊடக அறிக்கைகளின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியள வில் (2330 GMT) இஸ்ரேல் ராணுவம் ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகளையும் குறிவைத்து தாக்கி யுள்ளது.   தாக்குதலை தொடர்ந்து இரு நாடு களிலும் அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ளது. ஈரானின் வான் பரப்பு மூடப் பட்டுள்ளது.  முதல் கட்டமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானுக்கு அதிக சேதம் உருவாகியுள்ளது.  இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் களுக்கான பதிலடி எதிர்பார்க்காத படி வலுவாக இருக்கும் என  ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா அலி கோமேனி எச்சரித்துள்ளார்.  தனது அறிக்கையில், “யூத இனவெறி ஆட்சி இன்று அதன் ரத்தக்கறை படிந்த கைகளால் எங்கள் அன்பான நாட்டில் குற்றம் செய்துள்ளது. குடியிருப்புப் பகுதி களை தாக்கியதன் மூலம் அதன் தீய நோக்கத்தை முன்பை விட அதிகமாக வெளிப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய குடி யரசின் ஆயுதப் படைகளின் சக்திவாய்ந்த கரங்கள் அவர்களைத் தண்டிக்காமல் விடாது” என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தா லும், இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என டிரம்ப் பேசியுள்ளார்.  இந்த தாக்குதல் நடந்த பிறகு டொனால்டு டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக  ஊடகத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்  ஈரானுக்கு பல வாய்ப்புகள் வழங்கிய தாகவும், அணு செறிவூட்டல் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள் ளார்.  மேலும் ஈரான் அவர்களுக்கு எதிராக வரக்கூடிய அதிக பலம் வாய்ந்த எதிப்பை எதிர்பார்க்கவில்லை, அமெரிக்காவும் இஸ்ரேலும் உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக ஆபத்துக்களை உருவாக்கக் கூடிய ராணுவத் தள வாடங்களை வைத்துள்ளோம். அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற திறன் கொண்ட நாடுகளாகவும் உள்ளோம் என கூறிக் கொண்டுள்ளார். சில ஈரானிய தலைவர்கள் மிகவும் துணிச்சலாக பேசினர், ஆனால் அவர்கள் என்ன நடக்க உள்ளது என்று அறிந்திருக்க வில்லை. இப்போது அவர்கள் அனை வரும் இறந்து விட்டனர். இந்த நிலைமை மேலும் மோசமடையும் என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். இப்போதே தாங்கள் கூறும் ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈரானுக்கு அழிவு மட்டுமே மிஞ்சும் என்றும் மிரட்டல்  விடுத்துள்ளார்.  ஈரான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்பதற்கு, டிரம்பின் இந்த மிரட்டலே சாட்சியாகும். இதனிடையே, பதிலடி தாக்குதலாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது.