மதுரை, ஜூலை 9- மதுரையில் கொரோனா கட்டுக்குள் உள்ளதா கவே அமைச்சர்கள், மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் டி.விசாகன் ஆகியோர் தொடர்ந்து கூறிவருகின்றனர். முதல்வர் எடப்பாடியும் கொரோனா கட்டுக்குள் உள்ளதாகவே சமாதானம் கூறுகிறார். ஆனால், தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அதி காரப்பூர்வ அறிவிப்பின்படி கடந்த எட்டு நாட்களாக மதுரையில் கொரோனா மூன்று இலக்கத்திலேயே தொடர்ந்து பதிவாகி வருகிறது. ஜூலை 1-297, ஜூலை 2-273, ஜூலை 3-287, ஜூலை 4-352, ஜூலை 5-308, ஜூலை 7-334, ஜூலை-379. எட்டு நாட்கள் பதிவில் எட்டாம் நாளான புதனன்று அதிகபட்சமாக 379 பேருக்கு தொற்றி ருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எட்டு நாட்களில் மட்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,475 ஆக உள்ளது. மரணத்தை பொறுத்தமட்டில் ஜூலை 1, 2 தேதி களில் உயிரிழப்பு இல்லை. இரண்டு நாட்கள் இல்லையே என ஆறுதலாக இருந்த நிலையில் 3-ஆம் தேதி 8 பேர், 4-ஆம் தேதி 6 பேர், 5-ஆம் தேதி- 5 பேர், 6-ஆம் தேதி-7 பேர், 7-ஆம் தேதி- 8 பேர், 9-ஆம் தேதி-10 பேர் என மொத்தம் 44 பேர் பலியாகி யுள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்றுக்கு இரண்டு முதியவர்கள் பலியானார்கள். நத்தத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர், கோபால் பட்டியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தொற்று பாதிப்பின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தனர். இருவரும் சிகிச்சை பலனின்றி வியாழன் அதிகாலை உயிரிழந்தார்.இது வரை மாவட்டத்தில் கொரானாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழனன்று கொரோனா தொற்றுக்கு பெண் உட்பட நான்கு பேர் பலியானார்கள். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யைச் சேர்ந்த 70 வயது பெண், 78 வயது ஆண், கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த 76 வயது ஆண், சாயல்குடியைச் சேர்ந்த 71 வயது ஆண் உட்பட நான்கு பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. 1,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 548 பேர் குணமடைந்துள்ளனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்து பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது . புதன்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட கம்பத்தை சேர்ந்த 72 வயது முதியவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ,தேனி என்ஆர்டி நகரைச் சேர்ந்த 63 வயது முதியவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேனி கம்போஸ்ட் ஓடைத்தெரு வை சேர்ந்த 45 வயது நபர், பாலூத்தைச் சேர்ந்த 42 வயது நபர் என மொத்தம் ஐந்து பேர் பலியானார்கள். இரண்டு பேருக்கு இறந்த பின் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை தேனி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் . உத்தமபாளையம் தனியார் கல்லூரி முதல்வர் மற்றும் அவரது மனைவி ,தேனி ஆட்சியர் அலு வலகத்தில் இ -பாஸ் வழங்கும் பிரிவில் பணிபுரியும் ஆண்டிபட்டி -ஜக்கம்பட்டியைச் சேர்ந்த ஊழியர், குமுளி தலைமைக் காவலர் என மொத்தம் 69 பேருக்கு புதன் கிழமை தொற்று உறுதியானது. வியாழக்கிழமை கம்பம் பகுதியில் ஆறு பெண்கள் உட்பட 10 பேருக்கும், பெரியகுளம் பகுதியில் மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கும் ,தேனி பகுதியில் ஐந்து பெண்கள் உட்பட 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போடி பகுதியில் கோடாங்கி பட்டி, போடி, மணியம்பட்டி தேவாரம் உள்ளிட்ட பகுதி களில் நான்கு பெண்கள் உட்பட எட்டு பேருக்கும், ஆண்டிபட்டியில் எட்டு பேருக்கும், ராயப்பன்பட்டியில் காவல்துறையைச் சேர்ந்தவரின் குழந்தை உட்பட நான்கு பேருக்கும், ஓடைப்பட்டியில் ஒரு பெண்ணிற் கும், சின்னமனூரில் 26 வயது பெண் உட்பட மூன்று பேருக்கும் என மொத்தம் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 1230 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரநிலையம் மூடல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டியாபட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பணியாற்றிவரும் கிராம செவிலியர்கள் மூன்று பேர் மற்றும் சுகாதார ஆய்வாளர் இரண்டு பேர் என ஐந்து பேருக்கு கொரோணா தொற்று பரவி யிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம். ரெட்டியபட்டிஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்பு, அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலை உருவாகியுள்ளது.
-நமது நிருபர்கள்