tamilnadu

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு தருக!

சென்னை,ஜன.4- நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என  முதல்வர் ஸ்டாலினிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், தலைமை யில் முதல்வரை நேரில் சந்தித்து, தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மனுவும் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- வடகிழக்குப் பருவமழை இயல்பு நிலைக்கு மாறாக மிக  அதிக அளவில் தொடர் கனமழை யாக பெய்ததால் தமிழ்நாடு முழு வதும் கடுமையான பாதிப்புக ளும், சேதாரங்களும் ஏற்பட்டு ள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இருப்பினும் விவசாயிகளின் பயிர் இழப்பீடுக ளுக்கு போதுமான இழப்பீடு கிடைக்காததால் குறிப்பாக தாளடி பயிர்கள் சாகுபடி செய்த நிலையிலேயே இழந்துவிட  விவசாயிகள் மீளமுடியாத  துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ள னர். இந்த நிலையில் அண்மை யில் சில நாட்களாகப் பெய்யும்  தொடர்மழையால் காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா  நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. இப்பயிர்கள் தண்ணீர் வடியும் போது சேறு சகதியில் படிந்து நெற்கதிர்கள் முளைப்பதுடன் அறுவடை செய்ய இயலாமல் பெரும் சேதத்திற்கு உள்ளாகும் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகி றோம். தொடர் கனமழையால் காவிரி  பாசன மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கெடுத்து,

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், விவசாயத்  தொழிலாளர்களுக்கு ரொக்கப் பண உதவியாக குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள் கிறோம். இயற்கை பேரிடர் குறித்து ஒன்றிய அரசின் உயர்நிலை அதிகாரிகள் கள ஆய்வு செய்து  திரும்பி பல வாரங்கள் ஆன பின்பும், எந்தத் தகவலும்  வெளியிடப்படாதது தமிழ் நாட்டை வஞ்சிக்கும் போக்காகும். ஒன்றிய அரசின் இந்த அணு குமுறைக்கு எதிராக மக்கள் உணர்வுகளை பிரதிபலித்து ஒன்றிய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுத்து, பேரிடர் நிவாரண நிதி பெற்று விவசாயி கள், விவசாயத் தொழிலாளர் களின் துயர் துடைக்கும் நடவடிக் கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக் கைகளை எடுத்துக் கூறினார். இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.