tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டிஜிட்டல் முறை அறிமுகம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு ரெட் அலர்ட் சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்ச ரிக்கையும் விடுத்திருக்கிறது.  புதிய தலைமை நீதிபதி சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  பதவிக்கு எம்.எம். ஸ்ரீவஸ்வை பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.  தற்போதைய சென்னை தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை  ராஜஸ்தான் தலைமை நீதிபதியாகவும் மாற்றவும் கொலி ஜியம் பரிந்துரை செய்துள்ளது. மநீம வேண்டுகோள் சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி  மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹா சனை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேர்வு செய்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்கள வைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான  கமல்ஹாசனுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக் கொண்டு உள்ளது. இரா.முத்தரசன் வாழ்த்து சென்னை: மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மக்கள் நீதி  மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுகவின் மூத்த வழக்கறி ஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம்  ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “தோழமைக் கட்சிகளின் கருத்து களை மதித்து, அரவணைத்து செல்வது, மாநில உரிமை களை பாதுகாக்கும் போராட்டத்தில் சட்டப் போராட்டத்தின் முக்கி யத்துவம், கருத்தியல் தளத்தில் சமூக நீதி ஜனநாயக, மதச்சார் பற்ற, பகுத்தறிவு கருத்துகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம்” என்று கூறியுள்ளார். தேர்தல் வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது  வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மறு  எண்ணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். மறு எண்ணிக்கை முடித்து தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையின் அடிப்படையில், செங்குட்டுவன் வழக்கை  தள்ளுபடி செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். வேட்பாளர் பட்டியல்: ஆலோசனை சென்னை: மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் தயார்  செய்வது குறித்து வியாழக்கிழமை (மே 29) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடை பெறுகிறது. இதில், வேட்பாளர் யார்? கூட்டணி கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுமா? என்பது தெரிய வரும்.

மக்கள் குரலாக ஒலிப்பார்’ சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு புதி தாக தேர்வு செய்யப்படவிருக்கும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து  தெரிவித்திருக்கும் மதிமுகவின் துரை.வைகோ, நாடாளு மன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என்றும், 2026 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார். காவல்துறையுடன் ஆலோசனை சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொடூ ரக் கொலைகள், கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என  எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நி லையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கனிமொழி எம்.பி., பதிலடி சென்னை: “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டுகள் ஆனது. அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத் திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனி சாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை  அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்” என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

கொரோனா தொற்று: முதியவர் உயிரிழப்பு சென்னை: கொ ரோனா தொற்று மீண்டும்  பரவத் தொடங்கியுள்ளது. தற்போது பரவி வரும் கொ ரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது. இந்நிலை யில், சென்னை மறை மலை நகர் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 60) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி யானது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் கொரோனா வுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதனன்று  சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.  இந்திரா காந்தி சிலை சென்னை: முன்னாள்  பிரதமர் இந்திரா காந்தி யின் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப் பட்டது. அதன்படி, காயிதே  மில்லத் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நிறுவ மாநகராட்சி கூட்டத் தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலா ளருமான எடப்பாடி பழனி சாமியின் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு  நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு சோதனை நடத்தப் பட்டது. பின்னர் இது மிரட்டல்  புகார் என தெரியவந்தது. புயல் கூண்டு ஏற்றம் சென்னை: மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதையொட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50  கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும். சில சமயங்களில் மணிக்கு 60 கி.மீ வேகத் தில் காற்று வீசக்கூடும் என்பதால் பாம்பன், தூத்துக்குடி துறைமுகத் தில் 3 ஆம் எண் புயல் எச்ச ரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யிருக்கிறது.