tamilnadu

img

உடுமலை சங்கர் படுகொலை வழக்கு ‘முதல் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்த வழக்கில் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்’

சங்கரின் மனைவி கௌசல்யா பேட்டி

மதுரை, ஜூன் 14- சாதி ஆணவப் படு கொலை செய்யப்பட்ட உடு மலைப்பேட்டை சங்கர் வழக்கில் முதல் குற்றவாளி சின்னசாமியின் விடு தலையை  எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சங்கரின் மனைவி  கௌசல்யா தெரிவித்துள் ளார்.  மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்கு நர் கதிர் மற்றும் உடுமலைப் பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யா ஆகியோர் புத னன்று  செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.  எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறுகையில்,  “ 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை யில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். 2017 ஆம்  ஆண்டு சங்கர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு உயர்நீதிமன் றத்தில் சங்கர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளி யான சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார்.  2020 ஆம் ஆண்டு சின்னசாமி விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, சங்கரின் மனைவி கௌசல்யா, சங்கரின் தம்பி விக்னேஷ்வரன் சார்பில் வழக்கு தொடுத்தனர். 

ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. வழக்கை விசார ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கவில்லை.  தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் 20 ஆண்டுக ளில் 6 ஆணவக் கொலை வழக்குகளில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள் ளது” என்று தெரிவித்தார்.  பின்னர் சங்கரின் மனைவி கௌசல்யா கூறு கையில் “உச்சநீதி மன்றத்தில் 3 ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர் என்கிற தரப்பில் வேதனை யாக உள்ளது. சங்கர் படு கொலை வழக்கில் உறு துணையாக இருப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.  ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு வர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, உச்ச நீதி மன்றத்தில் நீதியை எதிர் பார்த்து காத்துக்கொண்டி ருக்கிறேன்” என்று தெரி வித்தார்.