tamilnadu

img

500 மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம்

பெரம்பலூர், ஆக.18- ஜெர்மன் வங்கி நிதியுத வியுடன் 500 மின்சார பேருந்து கள் வாங்க ஒப்பந்தமாகி யுள்ளார் என்று போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட  அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆக.18)  நடைபெற்ற பல் வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ெஜர்மன் வங்கி நிதியுதவியுடன் 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தமாகியுள்ளது. இதில், முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் விடப்பட் டுள்ளது” என்றார். மின்சார பேருந்துகள் முதலில் சென்னையில் பரிட்சார்த்த முறையில் இயக்கி பரிசோதிக்கப்பட்டு, அதற்கு அடுத்தப் படியாக  பெருநகரங்களில் இயக்கப் படும் என்றும் அவர் கூறினார். போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற வர்களுக்கு தினப்படி உயர்வு குறித்த வழக்கு  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மிகுந்த கடன் சூழலில் தான் தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். போக்குவரத்துத் துறையில் உள்ள பிரச்சனை களும் முதல்வர் சீரமைத்து வருகிறார் என்றும்  அமைச் சர் தெரிவித்தார். ஓய்வுப் பெற்ற தொழி லாளர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக் கிறோம். விரைவில் அதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்தோடு ஆன்லைனில் தானியங்கி டிக்கெட் வழங்குகின்ற இயந்திரங்களுக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இது விரைவில் உறுதி செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்ட பிறகு, மற்ற பகுதிகளிலும் நடை முறைக்கு வரும் என்றும் அவர் கூறினார். இந்த பேட்டியின் போது,  மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.