tamilnadu

img

பாஜகவின் அலுவலகமாக மாறும் ராஜ்பவன்கள்

சென்னை, ஏப்.25- பாஜக கையில் கருவி யாக ஆளுநர் வசிப்பிடமான ராஜ்பவன் உள்ளது. ராஜ்பவன் பாஜவின் அலுவ லகமாக மாறி வருகிறது என்று கேரள மாநில அரசின்  முன்னாள் வனத்துறை அமைச்சரும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான பினாய் விஸ்வம் எம்.பி  தெரிவித் துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் திங்களன்று (ஏப்.25) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பெட்ரோலியம் விலை உயர்வு போன்ற பல பிரச்ச னைகளை நம் நாடு சந்தித்து  வருகிறது. மோடி அரசு மக்க ளுக்காக இல்லை. இது  அதானிக்கும் அம்பானிக்கும்  அவர்களின் ஆசைகளுக் காகவும் போராடிக் கொண்டு உள்ளது. பேராசை தற்பொழுது ஒரு புது மதமாக மோடி அரசாங்கத்தில் மாறி உள்ளது.மோடியும் அவரது நிறுவனமும் லாபம்  ஈட்டுவதையே குறிக்கோளா கக் கொண்டுள்ளனர். மோடி அரசு நாடு முழுவதும் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்

அமித்ஷா சமீபத்தில் புதுச்சேரியில் உரையாற்றி னார். அவரின் உரை முழுவ தும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற போதனை களே அதிகம். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.  2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்து மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகளும் கூட்டணி  சேறும் என்று நாங்கள் நம்புகி றோம். தேர்தல் போரில் கேரளா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு பெரிய  பங்கு உண்டு. பாஜக கையில் கருவி யாக ஆளுநர் வசிப்பிடமான  ராஜ்பவன் உள்ளது. அனைத்து இடத்திலும் ராஜ் பவன் பாஜவின் அலுவல கமாக மாறி வருகிறது. தமிழகத்தில் நடப்பது கேரளாவிலும் நடக்கிறது. அவர்கள் (ஆளுநர்) பல்கலைக்கழகங்களின் இன்றைய நடவடிக்கை களில் தலையிடுகிறார்கள். இது கூட்டாட்சி மதிப்புக ளுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்று.  2024 தேர்தலை எதிர் கொள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது  கட்சியின் மாநிலச்செயலா ளர் இரா.முத்தரசன் உடனி ருந்தார். பின்னர் பினாய் விஸ்வம், முத்தரசன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  தலைமை  செயலகத்தில்  சந்தித்து  கோரிக்கை மனு அளித்த னர்.