ஒலிம்பிக் உட்பட சர்வதேச அளவில் வில்வித்தைப் போட்டியில் தமிழக வீரர்கள் தொடர்ச்சியாக சாதித்துவரும் சூழலில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் வில்வித்தை போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக வில்வித்தை பயிற்சியாளர்கள் வட்டாரத்தில் விசாரிக்கும்போது ஆண்டுதோறும் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தமி ழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வில் வித்தை விளையாட்டு போட்டி சேர்க்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. வில்வித்தை விளையாட்டில் பயிற்சி பெற ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்பதால் ஓரளவு வசதி உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஆரம்பகட்ட பயிற்சிக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள வில் வாங்க வேண்டி இருக்கும். நன்கு பயிற்சி பெற்று தேசிய போட்டியில் பங்கேற்கச் செல்லும் போதுதான் ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள். பழகும் போது ஸ்பான்சர்கள் கிடைக்க மாட்டார் கள். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வில் வித்தை என்பது எட்டாக்கனியாக உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தில் வில்வித்தைப் பயிற்சியை கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட விளையாட்டு மைதா னங்களிலும் பாட்மிண்டன், கால்பந்து அரங்குகள் இருப்பதால், வில்வித்தை விளையாட்டுக்கு தனி மைதானங்கள் தேவையில்லை. எனவே உரிய கருவி களும் பாதுகாப்புக் கவசங்களும் இருந்தால் முறை யான பயிற்சி அளிக்கலாம் என்று சொல்கின்றனர். வில்வித்தையில் போதிய பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். இவர்களை தற்காலிக பயிற்சியாளர் அடிப்படையில் நியமிக்கலாம். விருப்பமுள்ள உடற்கல்வி ஆசிரி யர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி பெற வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அளவில் பள்ளிகளிலும், கல்லூரிகளும் வில்வித்தை விளை யாட்டு இல்லாததால் இதில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பும் பறி போகிறது. எனவே இது போன்ற சிறப்பு விளையாட்டு களிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர் வில்வித்தை பயிற்சியா ளர்கள். இதில் கவனம் செலுத்துமா அரசு என்பது தான் இப்போதுள்ள கேள்வி?