tamilnadu

img

ஜல்லிக்கட்டு வழக்கில் சு.வெங்கடேசன் எம்.பி., உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல்

மதுரை, நவ.5- ஜல்லிக்கட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு.வெங்க டேசன் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி யிருந்தது.  தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் கூபா (Compassion Unlimited Plus Action - CUPA) உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமி ழர்களின் பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட வேண்டி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவ்வழக்  கில் இடையீட்டு  மனு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் சு.வெங்கடேசன் கூறி யிருப்பதாவது: தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஜல்லிக்கட்டு உள்ளது. காதலையும் வீரத்தையும் போற்றிப் பாடிய தொன்மையான தமிழ் இலக்கி யங்களில் ஜல்லிக்கட்டு ‘ஏறுதழுவுதல்’ எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது.  பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு ஏறுதழுவுதல் மீதான  பிணைப்பு இந் நாள் வரைக்கும் தொடர்வதை இது காட்டுகிறது.

ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் Bull fighting எனும் மாட்டுச் சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. ஆனால், ஜல்லிக்கட்டு அப்படியில்லாமல் கலாச்  சார நிகழ்வாக கடைப்பிடிக்கப்படு கிறது. இது உள்ளூர் கிராம நிர்வாகத் தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதி காரிகள், கால்நடைத்துறை, மருத்து வர்கள் ஆகியோரின் மேற்பார்வையி லேயே நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் மாடுபிடிச் சண்டையில் மாடோ அல்லது மனிதரோ உயிரிழப்பது பொதுவானதாகவும் அந்த விளையாட்டின் ஓர் அங்கமாக வும் உள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டு  கால்நடைகளின் வளத்தை உயர்த்த வும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் கிரா மங்கள், அதற்காக மாடுகளை வளர்க்  கும் கிராமங்களின் பொருளாதா ரத்தையும் உயர்த்துவதற்குமான ஆதா ரமாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழர் களின் கலாச்சார பாரம்பரியம் பாது காக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் Convention of Protection of Cultural and Societal Rights, 1948 இன் படி ஜல்  லிக்கட்டை அனுமதிப்பது அவசியம்.  போலோ போன்ற விளையாட்டு களில் பயன்படுத்தப்படும் குதிரை களுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்படு கிறது. ஆனால், ஜல்லிக்கட்டில் காளை களுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்  கப்படுவதில்லை. மேலும் ஜல்லிக்கட்டானது ஒரு  மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்  பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமி ழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாச்சார நிகழ்வாக உள்ளது.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம் பரிய மொழி, அறிவு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட  வேண்டும் என்பதையும் அடுத்த தலை முறைக்கு அது கடத்தப்பட வேண்டும் என்பதையும் யுனெஸ்கோ வலியுறுத்து கிறது. இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்கூறிய இக்காரணங்களைக் குறிப்பிட்டு ஜல்லிக்கட்டு விளை யாட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டத் துக்கு எதிராக தொடரப்பட்ட Writ Petition (C) No 24 of 2016 எனும் வழக்  கில் தன்னையும் இணைத்துக் கொள்ள  வேண்டும் எனக்கோரி மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளார்.