தென் சென்னை மாவட்டம் முழு வதும் மக்களை சந்தித்து விலைவாசி உயர்வு,வேலை யின்மை, சாதி மத அரசியல், சொத்து வரி உயர்வு, ஏழைகளின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிப்பது போன்ற மோசமான சூழலில் வாழ்க்கை யை நடத்த முடிகிறதா என்று உரை யாடலை நடத்தலாம் என திட்டமிட்டோம். தென்சென்னை முழுவதும் 200 குழுக்க ளாக 2000 ஊழியர்கள் இணைந்து ஒரு நாளைக்கு ஐம்பது வீடுகள் வீதம் தினந்தோறும் பத்தாயிரம் வீடுகளில் பல ஆயிரக்கணக்கில் மக்களை சந்தித்து உரையாடல் நடத்தலாம் என தொடங்கி ஐந்து நாட்களாக வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தோழர்கள் உற்சாகமாக இதுபோன்று தொடர்ச்சியாக நடத்திடவேண்டும் என கூறுகிறார்கள். மயிலாப்பூர் தொகுதி மந்தைவெளி யில் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை சட்டை யில் பேட்ஜ்,கையில் செங்கொடி, துண்ட றிக்கையுடன் ஏழெட்டு தோழர்கள் ஒருவ ரோடு ஒருவர் பேசிக்கொண்டே ஒரு வீட்டில் துண்டறிக்கை கொடுத்து உரையாடிவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள் . அப்போது அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்யும் அம்மா ஏம்பா இங்க வாங்கப்பா எனக் கூப்பிட்டு எங்களை எல்லாம் கேக்க மாட்டிங்களா என்று கோபமாக கேட்டார்.
பிறகு இந்த துண்டறிக்கையை கொடுத்து எப்படிமா வியாபாரம் ஆகுது, விலைவாசி எல்லாம் எப்படி இருக்கிறது என கேட்டது தான், தாமதம். “இந்த வியாபாரம் செய்து தான் நான் குடும்பம் நடத்தனும். முன்னாடி லாம் தினமும் எல்லாம் போக 500 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் வரும். இந்த மோடி வந்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் போச்சி.என்னோட வருமானத்துலயே நான் சிறுவாடு (சேமிப்பு) புடுச்சி வைப்பேன். இப்ப அது லாம் எடுத்து செலவு பண்ணியும் வாழ முடியாம, தண்டல்காரன் கிட்ட கடன் வாங்கி தினமும் அவனுக்கு வட்டிக்கு கொடுக்கத்தான் சம்பாதிக்க முடியுது. கேஸ் விலை 1050 ரூபாய்,எண்ணெய் விலை 200 ரூபாய், அரிசி விலை 50 ரூபாய் பருப்பு விலை 200 ரூபாய் இப்படி போனா நாங்கள் சாகறத தவிர வேற வழி இல்லை.கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுதாம் என்பாங்க. அதுபோலதான் உள்ளது.இவ்ளோ கஷ்டப்பட்டு ஊட்டுக்கு போய் நிம்மதியா படுக்க முடியல. பெரிய பெரிய கட்டடம் கட்டி வச்சிருக்காங்க அதலாம் விட்டுட்டு புறாக் கூடுமாதிரி நாங்க கட்டிவச்சிருக்கிற வீட்டை இடிச்சே ஆகனும்னு துடிக்கிறானுங்க.எதோ பெரிய சண்டை நடக்கிற மாதிரி அம்மாம் போலீஸ் அதிகாரிங்க, புல்டோ சர் இப்படி எல்லாம் வந்து நின்னப்ப எங்க ஊட்ட பாதுகாத்தது இந்த கொடிதானுங்க” அப்படினு மளமளனு அழுதுகொண்டே பேசுனாங்க. அப்ப ஒருத்தவங்க 50 ரூபாய்க்கு ஏபாரம் பன்னாங்க. அந்த பணத்தை எடுத்து எங்க கிட்ட கொடுத்தாங்க வேணாம்மா நாங்க பணம் கேட்டு வரல உங்க குறையை கேக்கதான் வந்தோம். பணம் கேட்டு வரும்போது உங்களால் முடிந்தது கொடுங்க. இப்ப வேணாம்னு வந்துட்டோம்.
சோழிங்கநல்லூர் தொகுதி பர்மா காலனியில் மக்களின் குமுறல்கள் கொரோ னாவுக்கு பிறகு வருமானம் குறைந்து விலை வாசி உயர்ந்து செலவுகள் அதி கரித்து, எங்க சேமிப்புகள் எல்லாம் காலி யாகி கந்துவட்டிக்காரன் கிட்ட, மைக்ரோ பைனான்ஸ்காரன் கிட்ட, சுய உதவிக் குழுக்கள்னு. கடன்கள் வாங்கி, அந்த கடன் அடைக்க ஓடு ஓடுனு வாழ்க்கை ஓடு துங்க. எப்படி வாங்குகிறார்கள் என்று விசாரித்தோம். ஒருவர் ஆட்டோ தொழிலா ளியின் மனைவி. அவர் மகளிர் சுய உதவிக் குழு மூலமாக வாங்குவதாகவும், கணவர் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் அடைப்பதாகவும் கூறினார். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடையாறு பேருந்து நிலையம் அருகில் பழ வண்டி வியாபாரம் செய்பவர்கள். தண்ட லுக்கு பணம் வாங்கி தினந்தோறும் அடைக்கிறார்களாம். மற்றவர் கட்டுமானத் தொழிலாளி. தண்டலில் வட்டிக்கு வாங்கி வாராவாரம் அடைக்கிறார்களாம். தினத் தண்டலில் ரூ. 50,000 கடன் வாங்குகிறார் கள் என்றால் அவருக்கு தண்டல்காரர். ரூ.44,000 தான் தருவார்களாம். கடன் பெற்றவர்கள் தினந்தோறும் ரூ. 500 என்று 100 நாட்களுக்கு ரூ. 50,000 செலுத்திவிட வேண்டும். இதை பார்க்கும் போது பணம் எப்படியாவது கிடைத்தால் போதும் என்ற சூழலில் வாங்கி வாழ்நாள் முழுவதும் அந்த கடனை அடைக்க சம்பாதிக்கவே முடியவில்லை என்றால் இம்மக்களின்,வாழ்க்கையை எப்படி சரி செய்வது? அரசாங்கம் இத்தகைய தலைகாய்ந்த மக்களை பற்றி என்றைக்கு கவலைப்படும்.
இப்படி பிரச்சாரத்திற்கு போகும்போது ஏராளமான அனுபவங்கள் கிடைக்கிறது. பல்லாவரம் தொகுதி பொழிச்சலூர் கிராமம் தாங்கலில் முதல்நாள் துண்டறிக்கை கொடுத்து பிரச்சாரத்திற்கு சென்று உரையாடல் நடத்தி முடித்து, அடுத்தநாள் மீண்டும் அதே பகுதிக்கு சென்ற போது அந்த பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசி நானும் உங்களோடு வருகிறேன் என தானாக கிளர்ச்சி பிரச்சாரத்திற்கு வந்தார். இந்த அரசுகள் செய்யும் அநீதிக ளுக்கு எதிராக இந்த மக்களை எல்லாம் ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தவேண்டும். மக்களை, வாழமுடியாத அளவிற்கு விலைவாசியை உயர்த்தி சாகடிக்கிறார்கள் என்ற கோபத்தோடு கூடவே வந்தார். ஆலந்தூர் தொகுதி இரண்டாம் கட்டளை கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வெறும் 16 வீடுகள் மட்டுமே 1.30 மணி நேரத்தில் பார்த்து அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. கேஸ், பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் இதனால் மற்ற பொருட்க ளின் விலை உயர்வையும் பத்தி கோபமாக உரையாடினார்கள் . “இந்த பிரதமர் மட்டும் என் கையில் மாட்டினால் நாலு வார்த்தை நாக்கப் புடுங்கிக்கிட்டு சாகறமாதிரி கேப்பேன் என கோபமாக திட்டியதோடு, நீங்கள் தான் எல்லாத்துக்கும் போராடு கிறீர்கள். நம்ம ஊர்ல கூப்புடுங்க நாங்க ளும் வருகிறோம். எங்க குழந்தைங்க 12 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். அவர்களு க்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்க, என்னபடிக்கிறது என்பதை எல்லாம் சொல்லிக்கொடுங்க” என ஆர்வத்தோடு கூறினார்கள்.
இந்த கிளர்ச்சிப் பிரச்சார இயக்கத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குண சேகரன், மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் துவக்கி வைத்து மக்களுடன் அரசியல் உரையாடல்கள் நடத்தினார் கள். இப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊழி யர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இத்தகைய கிளர்ச்சிப் பிரச்சார இயக் கத்தை நாம் முன்னெடுக்கவேண்டும் என்றனர். அய்யப்பன் தாங்கலில் இப்படி பிரச்சாரம் செய்துகொண்டு போகும் போது வழியில் பார்த்தவர் ஒருவர், வேக மாக வந்து துண்டறிக்கையை வாங்கிக் கொண்டு உங்கள் போன் நெம்பரை கொடுங்கள் என்று வாங்கிக்கொண்டு அவசர அவசரமாக பேருந்தில் ஏறி விட்டார். அன்று அவர் வாங்கிய அந்த போன் நெம்பருக்கு போன்பேயில் 250 ரூபாயை அனுப்பிவிட்டு என்னிடம் அவ்வளவுதான் பணம் இருந்தது அத னால் தான். உங்கள் கட்சி மாதிரி ஒரு கட்சி இல்லை என்றால் இந்த நாட்டை முழு மையாக விற்று தின்னுவிடுவார்கள். உங்களால் தான் இந்த நாடும் மக்களும் குறைந்தபட்சமாவது நிம்மதியாக வாழ முடி கிறது. நீங்கள் மட்டும் இல்லையென்றால் என்றோ எல்லாம் முடிந்திருக்கும் என்றார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மோடி அரசின் மீதும் திமுக அரசின் மீதும் கோபமாக உள்ளது. “மூன்று நான்கு தலைமுறைகளாக நாங்கள் சேர்த்துவைத்துள்ள மொத்த சேமிப்பும் இந்த வீடுதான். நாங்கள் வாழ்ந்து வரும் வீடுகளை நீதிமன்றத்தை காரணம் சொல்லி இடிக்க முயல்வது மிகவும் கண்ட னத்துக்குரியது.நாங்கள் வாக்களித்தது உங்களுக்கு தானே ஒழிய, நீதிமன் றத்திற்கு கிடையாது. சாஸ்த்ரா பல்கலைக் கழகமும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரியும், ராமச்சந்திர மருத்துவக் கல்லூரியும், எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகமும் ஆக்கிரமித்தால் அமைதியாக இருக்கும் திமுக அரசு, ஏழைகளின் வீட்டை இடிக்க மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம்? அவர்கள் தலையில் அவர்களே மண்ணைபோட்டுக் கொள்வ தற்கு சமம். இன்னும் ஒன்றரை ஆண்டு கழித்து எங்களிடம் தானே வரவேண்டும் என்றார்கள். கிளர்ச்சிப் பிரச்சார இயக்கம் முழுமை யாக நடந்து முடிகின்ற போது நமக்கு கிடைக்கக்கூடிய தொடர்பும், அனுபவமும் மிகப்பெரிய படிப்பினையாக அமையும். இந்த தொடர்புதான் நமது கட்சியை மக்கள் செல்வாக்குள்ள வெகுமக்கள் கட்சியாக மாற்றும்....