கோவை, ஜன.28- பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள் அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்த அறைகூவலையேற்று வெள்ளி யன்று கோவையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 01.08.2017 முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 1995 ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் இணைக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்திடவும், ஊதிய உயர்வுக்கேற்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பொதுத்துறை இன்சூரன்ஸ் ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நலச்சங்கங்களைச் சேர்ந்த 16 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக, 28 ஆம் தேதியன்று நாடு முழுவதும் ஒருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, கோவை நேசனல், ஓரியண்டல், யுனை டெட் இந்தியா மற்றும் நியு இந்தியா ஆகிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராள மானோர் கலந்து கொண்டனர்.