திருச்சூர், மே. 7- நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வும், இந்தியப் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்காற்றிய பொதுத்துறையைப் பாதுகாக்கவும் அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர் களும் போராட வேண்டும் என்று தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளன கேரள மாநில மகளிர் மாநாடு அழைப்பு விடுத்துள்ளது. மாநாட்டை அமைச்சர் டாக்டர். ஆர்.பிந்து துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்று கூறினார். பெண்களுக்கு எதிரான வன்கொடு மைகளைத் தடுக்க நீதியரசர் வர்மா ஆணையத்தின் பரிந்துரைகளை கடுமையாக அமல்படுத்த ஒன்றிய அரசு முன்வரவேண்டும். பொதுத் துறையை தனியார்மயமாக்கு வதை எதிர்த்தும், தேசிய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் ‘தேசிய சொத்து பண மாக்குதல் திட்டம்’ போன்றவற்றுக்கு எதிராகவும், பணவீக்கத்தைத் தடுக்கவும், பொது விநியோக முறை யை வலுப்படுத்தவும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.