tamilnadu

img

பெருமாள்புரம் தொடக்கப்பள்ளியில் கண்காணிப்பு அலுவலர் ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலி ,டிச .23- நெல்லை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப் படுவதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளருமான செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பெரு மாள்புரம் மாநகராட்சி தொடக்க பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு  திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவின் வகைகள் குறித்தும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்தார்.  பின்னர் அவர்களுடன் அமர்ந்து கண்கா ணிப்பு அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உணவு சாப்பிட்டனர். எண்ணும், எழுத்தும் கற்றல் திட்டத் தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி ஆசிரி யர்களிடம் கேட்டறிந்து அப்பள்ளி மாண வர்கள் இத்திட்டத்தின் வாயிலாக  கற்றல் திறனை கண்காணிப்பு அலுவலர் பார்வை யிட்டார். தொடர்ந்து பெருமாள்புரம் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்து பொருட்கள் போதுமானதாக இருப்பு உள்ளதா? என்றும் நோயாளி களுக்கு அளிக் கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.