tamilnadu

அரசு மருத்துவமனைகளில் குறைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்குக!

சென்னை, ஜன. 2 - அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் குறைக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டுமென்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை காட்டி 2019ம் ஆண்டு அர சாணை வாயிலாக மருத்துவர் பணியி டங்களை அரசு மறு சீரமைத்தது.  மருத்துவம் அல்லாத துறைகளிலும், காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவம் ஆகிய இரண்டு துறைகளிலும் ஆசிரியர் பணியிடங் ்களைக் குறைத்தது.

இதன்படி ஆசிரியர் பணியில் இருந்த 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அவர்க ளது துறைகளில் இருந்து வெளி யேற்றியது. தமிழகமெங்கும் உள்ள 35 மருத்துவக் கல்லூரிகளிலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் குறைந்தபட்ச விதிகளின்படி இருக்க வேண்டிய ஆசிரியர்கள் இல்லை. உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலை பெற்ற 150 அரசு மருத்துவர்களுக்கும் அரசு பணி வழங் ்காமல் உள்ளது. 4 முக்கிய துறை களில் மாநிலம் தழுவிய பணி மூப்பு எண்ணிக்கை அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மறுசீரமைப்பு நடத்தப்படவில்லை.

இது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, சுகாதாரத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்இது தொடர்பாக சட்டப் போராட்டக் குழுவி னரை அழைத்து பேசி, 600க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு பணி வழங்க வேண்டும். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்த பல் மருத்துவர் பணியிடங்களை அகற்றியதன் மூலம், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு,நோயாளிகளும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுவும் கொரோனா சமயத்தில், மருத்துவர்களுக்கு வேலைப்பளுவை அதிகரிப்பதாக உள்ளது. சுகாதாரத்துறை கட்ட மைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கூட, குறைக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்களை மீண்டும் உருவாக்குவது குறித்து அரசு சிந்திக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. எனவே, அமைச்சர் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள மருத்து வர்களுக்கும், மக்களுக்கும் நியாயம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை 354இன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.