புதுதில்லி, டிச.30- நாகாலாந்தில் சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள் ளது. நாகாலாந்து மாநிலம் “ஒரு ஆபத்தான” பகுதியென வியாழக்கிழமையன்று ஒன்றிய அரசு கூறியது. “நாகாலாந்து மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளதால், மக்களின் உதவிக்காக ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது அவசியம் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்- 1958 (1958 ஆம் ஆண்டின் எண்.28) பிரிவு 3 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங் களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலம் முழுவதையும் ‘பதற்றம் நிறைந்த பகுதி’ என்று ஒன்றிய அரசு இதன் மூலம் அறிவிக்கிறது. இந்தச் சட்டம் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப் படுகிறது” என்று உள்துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. '
ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான சாத்தி யக்கூறுகளை ஆராயும் குழுவில் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உள் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்ட த்தில் அப்பாவி மக்கள் 13 பேரை எல்லை பாது காப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். இத னால் மாநில மக்கள் கொந்தளித்து பெரும் போராட்டத்தை நடத்தினர்.
நாகாலாந்தில் சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று முதல்வர் நெய்பியு ரியோ, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசாம் முதலமைச்சரும், வடகிழக்கு மாநி லங்களில் பாஜகவின் முக்கிய பிரமுகரு மான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்ட கூட்டத்தில், “மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மாநில காவல் துறையை உள்ளடக்கிய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக்குழு 45 நாட்களுக் குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் மற் றும் அதன் பரிந்துரைகளின் அடிப்படை யில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் திரும்பப்பெறப்படும் எனத் தெரி விக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.