புதுதில்லி, ஆக.1- அரசு பொதுத்துறை நிறுவனங் கள் கொள்முதல் செய்வதில் எஸ்.சி, எஸ்.டி., தொழில்முனைவோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என் பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்வியால் அம்பலமானது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: நாடாளுமன்றத்தில் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி. சிறு, குறு, தொழில் முனைவோர் களிடமிருந்து எவ்வளவு கொள் முதல் செய்யப்படுகிறது என்பதைப் பற்றிய கேள்வியை (எண் 94/ 22.7. 2023) எழுப்பி இருந்தேன். அதற்கு ஒன்றிய சிறு, குறு, நடுத் தர தொழில் அமைச்சர் பானு பிரதாப் சர்மா தந்துள்ள பதில் அதிர்ச்சியை அளிக்கிறது. 2018 - 19 இல் 166 ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,53,485 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் ரூ.825 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.54 சத வீதம்.
2019- 20 இல் 152 ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,31,461 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் ரூ. 691 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.53 சதவீதம். 2020 - 21 இல் 161 ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ. 1,39,420 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி சிறு, குறு, தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் ரூ. 769 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.55 சத வீதம். 2021 - 22 இல் 159 ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,64,542 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் ரூ.1291 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.78 சத வீதம். 2022 - 23 இல் 150 ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.1,75,099 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் ரூ.1468 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.84 சத வீதம்.
எல்லாம் அரை சதவீதம், முக் கால் சதவீதமாக உள்ளது. ஆணையை மீறிய நிறுவனங் கள் தண்டிக்கப்பட்டதா? ஆனால் சிறு, குறு, நடுத்தர தொழில் மேம் பாட்டு சட்டம் 2006 இன் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட 2012 சிறு, குறு தொழில்களுக்கான பொது கொள் முதல் கொள்கை ஆணை என்ன சொல்கிறது? ஒன்றிய அரசின் அமைச்சகங் கள், துறைகள், பொதுத் துறை நிறு வனங்கள் தாங்கள் செய்யும் சரக்கு/ சேவை கொள்முதலில் 4 சதவீதம் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டு மென்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 சதவீதம் எங்கே? இந்த அரை முக்கால் சதவீதம் எங்கே? 2012 ஆணையை மீறுபவர் களுக்கு தண்டனையாக ஒரு மதிப் பெண் குறைக்கப்படுகிறது என்று அமைச்சரின் பதில் கூறுகிறது. இதுவரை எத்தனை நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன? மதிப் பெண் குறைவதால் என்ன விளைவு? அப்படி தண்டிக்கப்பட்டு இருப்ப தாக வைத்துக் கொண்டாலும் சத வீதம் 4 க்கு பக்கத்திலேயே இல் லையே? இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.