tamilnadu

img

மருத்துவமனைகளில் தினமும் தடுப்பூசி சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்

சென்னை,ஏப்.9- தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வாரம் தோறும் சிறப்பு மெகா  தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.  இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மேலும் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் இது வரை 91 விழுக்காட்டினர் முதல்  தவணை தடுப்பூசியும், 73 விழுக்காட்டி னர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ள னர். இந்த வரிசையில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு குறைந்துள்ளது. இதனால் இந்த வாரம் முதல் சிறப்பு  தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட் டுள்ளன.

எனவே இனி வாரம் தோறும்  சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது. அதே வேளையில் தினமும் மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கொரோனா தடுப்பூசி போடப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பொது  சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:- தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு  பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு  இருந்தது. தற்போது பெரும் பாலானோர்  தடுப்பூசி போட்டுவிட்டனர். எனவே இனி வரும் நாட்களில் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தனியாக தடுப்பூசி  முகாம்கள் நடத்தப்படும். தேவையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களே தடுப்பூசி முகாம் நடத்திக்கொள்ளலாம். தடுப்பூசி முகாம்கள் எங்கு தேவை என்பதை அந்த மாவட்ட சுகாதார இணை இயக்குநர்கள் கண்டறிந்து இதற்கான பணிகளை மேற்கொள் வார்கள். இது தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளது. கொரோனா புதிய உருமாற்ற த்தை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.