இடத்தை ஆக்கிரமித்த தனிநபர்: சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டி, ஜுன் 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நீண்ட காலமாக அரசு நத்தம் வகைப்பாட்டில் சர்வே எண் 107/14, காலிமனையில் குடியிருந்த அறிவழகன் நாகராஜன் இடத்தை அபகரித்து, அருகில் குடியிருந்த ரேவதி பாஸ்கர் சர்வே எண்:107/16, பட்டா எண்:851 அரசு வழங்கப்பட்டுள்ள பட்டா இடத்தில் குடி இல்லாமல், அருகில் தனிநபர் அனுபவத்தில் உள்ள இடத்தை ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையை கண்டித்தும் மாபெரும் காத்திருப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. வட்டாட்சியர் பரமேஸ்வரி, போராட்டக் குழுவினரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், மாவட்ட நில அளவையர் மூலம் நிலத்தை அளப்பதாகக் கூறிய பிறகு, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேதையன், ஜி.கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜி. ரகுராமன், கே.பி. ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. வேலவன், நகர்மன்ற துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என். வீராச்சாமி, ஆர். ராஜேஸ்வரி, நகரக்குழு உறுப்பினர் தண்டபாணி, கோரிக்கைகளை பாடலாக பாடிய நாட்டுப்புற பாடகர் மதியழகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.