இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 75 ஆம் ஆண்டு பவளவிழா மாநாடு மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அக்கட்சியின் தேசிய தலைவர்பேராசிரியர் கே.எம்., காதர்மொகைதீன் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சென்னையில் நடக்கும் தொடக்கவிழாவிலும் தில்லியில் நடைபெறும் நிறைவு விழாவிலும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அப்போது கேரளா மாநில தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கல், தேசிய பொதுச் செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்சாலிகுட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், அப்துல் வஹாப், அப்துல் சமது சமதாணி, கே. நவாஸ் கனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.