மும்பை, மார்ச் 7- மகாராஷ்டிர அமைச்சர் நாவப் மாலிக்கை மார்ச்-21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத் துறையினர் பிப்ரவரி 23-ஆம் தேதி கைது செய்தனர். ஆளும் சிவசேனை தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளராக உள்ள நவாப் மாலிக்கை மார்ச் 7-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நாவப் மாலிக்கை மார்ச்-21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது.