tamilnadu

img

இந்திய சர்க்கஸ் முன்னோடி ‘ஜெமினி சங்கரன்’ காலமானார்

கண்ணூர் ஏப். 24- “ஜெமினி சங்கரன்” 1924-ஆம்  ஆண்டு கொலசேரியில் (கண்ணூர் - கேரளா) பிறந்தார். தற்காப்புக் கலை கள், ஜிம்னாஸ்டிக் போன்றவற்றிற்கு பயிற்சி கொடுத்து வந்த கீலெரி குஞ்ஞிக் கண்ணனிடம் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்று,  ராணுவத்தில் இணைந்து இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஓய்வு பெற்றார். தொடர்ந்து பல்வேறு சர்க்கஸ் கம்பெனிகளுடன் இணைந்து பணி யாற்றிய பிறகு, 1951-ஆம் ஆண்டு “விஜயா சர்க்கஸை” வாங்கி அதற்கு “ஜெமினி சர்க்கஸ்” என்று பெயர் மாற்றினார். பின்னர் “ஜம்போ சர்க்கஸ்” என்ற பெயரில் மற்றொரு சர்க்கஸ் கம்பெனியை தொடங்கினார். நாட்டின் சர்க்கஸ் கலைக்கு சங்கரன்  ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப் பிற்காக ஒன்றிய அரசு அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஜெமினி சங்கரன் கண்ணூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிறன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த ஜெமினி சங்கரனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள னர். ஜெமினி சங்கரனின் உடல் பொ துமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவ ரது இறுதிச்சடங்கு செவ்வாயன்று பையாம்பலம் (கண்ணூர்) கடற்கரை யில் நடைபெறுகிறது. பினராயி விஜயன் இரங்கல் “வெளிநாட்டுக் கலைஞர்களின் திறமைகளை உள்ளடக்கி இந்திய சர்க்கஸ் கலையை நவீனமயமாக்கு வதில் சங்கரன் முக்கிய பங்கு வகித்தார். அவரது இழப்பு நாட்டிற்கும், சர்க்கஸ் கலைக்கும் பேரிழப்பாகும்” என சங்கரனின் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் குறிப்பில் தெரி வித்துள்ளார்.