சிதம்பரம், ஏப். 10 - ஒன்றிய ஆட்சியதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாஜக வின் அச்சுறுத்தல், மிரட்டல் நட வடிக்கைகளுக்கு ‘இந்தியா’ கூட் டணி வேட்பாளர்கள் பயப்பட மாட்டோம் என்று தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதி யில் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். சிதம்பரம் புறவழிச் சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் தங்கி, பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், இந்த வீட்டில்தான் தேர்தல் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.9) இரவு 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த தக வல் தெரிந்து, செய்தியாளர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் பேசினார். “திடீரென ஏழு பேர் வந்தனர். அதனால் இது வழக்கமான பறக்கும் படை சோதனை என்றுதான் நினைத்தோம். ஆனால், அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் நேராக தலைவர் தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை செய்தனர். பிறகு, வீடு முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், ஆவணங்கள் மற்றும் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதன் பிறகுதான் தெரிந்தது, வந்தவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று. எங்கள் தலைவருக்கு தொகுதி முழுவதும் கடந்த முறையைக் காட்டிலும் அதிகமாக வரவேற்பு உள்ளது. அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சோதனை நடத்தினர். பாஜகவினர் இந்த மிரட்டல் மூலம் எங்களது வெற்றியை தடுக்க முடியாது” என்று அவர் கூறினார். இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே புதன்கிழமை (ஏப்.10) காலை பிரச் சாரத்தைத் துவங்கிய தொல். திருமாவளவன், “நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளை சார்ந்த முதலமைச்சர்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகளை கொண்டு ஒன்றிய பாஜக அரசு முடக்கி வருகிறது. அதன் தொடர் நடவடிக்கை தான் நான் தங்கியிருந்த வீட்டி ற்கும் வருமான வரித் துறையினரை அனுப்பி சோதனை என்ற பெயரில் மிரட்டல் விடுகின்றனர். பாஜகவின் இந்த அச்சுறுத்தல், மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். எனது வெற்றி மட்டுமல்ல ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியையும் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது” என்றார். பிரச்சாரத்தின் போது வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உடனிருந்தார்.