tamilnadu

img

வடமாநிலங்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும்

நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அமோக வெற்றி பெறும். தேர்தலைக் கருத்தில் கொண்டு  பாஜக அரசு, கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது.  கடந்த 76 ஆண்டு கால இந்திய வரலாற்றில் தற்போது மெகா ஊழல் நடந்துள்ளது.  2017-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கம்பெனி சட்டம் உட்பட 5 சட்டங்களை திருத்தம் செய்து தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் முறையை அமல்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் ஊழல் நடந்துள்ளது. தேர்தல் பத்திரம் பெற்ற கட்சி களின் விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முழுமையாக வெளியிடவில்லை. தற்போது உச்சநீதிமன்றம் தலையிட்டு அனைத்து விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளது. திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் சரிபார்த்த பின்னரே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதில் இருந்து