tamilnadu

img

அதிகரிக்கும் நிலக்கரி பற்றாக்குறை

புதுதில்லி, மே 28- இந்தியாவின் பல்வேறு பகுதி களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற் படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஒன்றிய மின்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.  செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதிக மின் தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்தடை கடுமையாக இருக்கும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செப் டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவுக்கு உள்ளூரிலிருந்து 154.7 மில்லியன் டன் நிலக்கரி விநி யோகிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது கணிக்கப்பட்ட 197.3  மில்லியன் டன் நிலக்கரியை விட 42.5 மில்லியன் டன் குறைவு.  இந்த வீழ்ச்சி முன்பு கணிக்கப்  பட்டதிலிருந்து 15 சதவிகிதம் அதிக மாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள் ளது. மின் தேவை அதிகரித்திருப்பது, மின் நிலையங்களில் உற்பத்தி  குறைந்திருப்பது ஆகியவை கார ணங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த 38 ஆண்டுகளில், வரு டாந்திர மின் தேவை என்பது தொட ர்ந்து அதிகரித்துவந்துள்ளது. இதை பார்க்கும் போது, இந்தியாவில் ஏற்  பட்டுள்ள கடுமையான எரிபொருள் பற்றாக்குறையையே இது காட்டு கிறது. 

உக்ரைன் மீது ரஷ்யா மோதலால் உலகளாவிய நிலக்கரியின் விநி யோகம் பாதிக்கப்பட்டு விலை வர லாற்றில் இதுவரை இல்லாத அள வுக்கு உயர்ந்துள்ளது. இதனி டையே, இறக்குமதியை அதிகரிக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டது. இறக்குமதியின் மூலம் நிலக்கரி இருப்பை அதி கரிக்காவிட்டால் ஏற்கெனவே வெட் டப்பட்ட நிலக்கரியின் விநியோகம் மேலும் குறைக்கப்படும் என எச்ச ரித்துள்ளது. இருப்பினும், நிலக்கரியை இறக்குமதி செய்ய பல்வேறு மாநிலங்கள் இன்னும் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. ஜூலை மாதத்திற்குள், நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும். ஏப்ரல் இறுதி வரையில், ஒரே ஒரு மாநிலம் மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால், ஜூலை மாதத்திற்குள் இந்திய நிறுவனங்களில் நிலக்கரி தீர்ந்துவிடும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 2023 மார்ச் மாதம் நிலக்கரி தேவை 784.6 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது முன்பு கணிக்கப்பட்டதை விட 3.3 சதவீதம் அதிகம்.

;