tamilnadu

img

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

தருமபுரி, ஆக.18- கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை யின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடிக்கு  மேல் தமிழ்நாடு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு  தமிழ்நாடு எல்லையான பிலி குண்டுலு வந்தடைந்தது. அதனைத்  தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து மேலும் நீர்வரத்து அதிகரித்து 22 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த நீர் வரத்தால் ஒகேனக் கல் காவிரி ஆற்றில் கடந்த இரு  தினங்களாக நீர்வரத்து படிப்படியாக  அதிகரித்து வண்ணம் உள்ளது. தற்போது 14 ஆயிரம் கன அடியாக  அதிகரித்து தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டியது. இதன் காரண மாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலி குண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க  3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.