tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட சமூக ஊடக அலுவலகம் திறப்பு விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட சமூக ஊடக அலுவலகம் திறப்பு விழா செவ்வாயன்று (நவ.7) தரமணியில் நடைபெற்றது. அலுவலகத்தை திறந்து வைத்த மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் 634 மார்க்சிஸ்ட் சந்தா, 159 செம்மலர் சந்தாக்களை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ச.லெனின் வழங்கினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்கரன், எம்.ரெங்கசாமி, எஸ்.முகமது ரஃபி,  மூத்த தலைவர் எஸ்.குமாரதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.