சுதந்திரப் போராட்ட வீரரும், மராத்வாடாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவி கட்டியெழுப்பிய முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் எம்.பி.,யுமான தோழர் கங்காதர் அப்பா புரந்தேவிற்கு மகாராஷ்டிரா மாநிலம் மோஹா மாவட்டத்திற்கு உட்பட பீட் பகுதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஞாயிறன்று திறந்து வைத்து, மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் உதய் நார்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.