திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தையொட்டி, பிப்ரவரி 21 மாலை பொன்னேரி ஹரிஹரன் பஜாரில் மாபெரும் அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ப.சுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.