tamilnadu

img

மின் துறையை பாதுகாக்க வேலைநிறுத்தக் களம் காண்போம்! - எஸ்.ராஜேந்திரன் , பொதுச் செயலாளர்

நூல்: சாதி வர்க்கம் விடுதலை
ஆசிரியர்: பி.சம்பத்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: 310

பாரதி புத்தகாலயத்தால் “சாதி - வர்க்கம் - விடுதலை” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக களமாடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புறு தலைவருமான தோழர் பி.சம்பத் அவர்கள் எழுதியுள்ளார். 

மார்க்சிய பார்வை

1990களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த காலங்களில் சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராக தலைமையேற்று பி.சம்பத் நடத்திய போராட்டங்கள் மிக முக்கியமா னவை. இப்போராட்டங்கள் தமிழகம் தழுவிய தாக்கங்களை உருவாக்கியது மட்டுமின்றி சாதிய ஒழிப்பிற்கான மார்க்சிய அணுகு முறையை, வழிமுறையை வெளிப்படுத்து பவையாகவும் அமைந்தன. 1990களில் நடை பெற்ற தென்மாவட்ட கலவரங்களுக்குள் இருந்த நுண் அரசியலை புரிந்து, சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக கனன்று எழுந்த தலித் எழுச்சியை உள்வாங்கி, “ஒற்றுமை” என்கிற பொதுவான முழக்கமாக மட்டும் அல் லாது பிரச்சனையின் வேர்களை ஆய்ந்தறிந்து சாதிய ஒடுக்குமுறை சாய்ப்போம், மக்கள் ஒற்றுமை வளர்ப்போம் என்கிற சரியான பார்வையை முன் வைத்ததுமான நிகழ்வு களும் மிகமிக முக்கியமானவை. இதற்காக களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நேரடி நடவடிக்கைகள், மாதர் - வாலிபர் - மாணவர் - தொழிற்சங்கங்கள் ஆற் றிய அரும் செயல்கள், பின்னர் 2007 இல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பரிணாமம், அதற்கு பின்னர் தமிழகத்தில் எந்த மூலை முடுக்கில் சாதிய ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் அதில் தலையிடுகிற தீ.ஒ.மு.வின் களப்பணி... இந்த 30 ஆண்டு வர லாறுதான் இந்நூலில் விரிந்துள்ளது. 

30 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பணி யில் ஈடுபட்டவர், தலைமை தாங்கியவர்களில் ஒருவர் என்ற முறையில் அவரது அனுபவங் கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இது வெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அல்லாது சாதியின் வேர்களை தேடுவதில் துவங்கி சமகால விவாதங்களில் பங்கேற்பது வரை நம்மோடு நெருங்கி உரையாடுகிறது.  32 அத்தியாயங்கள் 300 பக்கங்கள் கொண்ட இந்த நூல் கால் நூற்றாண்டு காலமாக அவர் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.  கட்சித் திட்டமும் - கடமையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் பத்தி 5.12, “சாதி அமைப்பை ஒழிப்பதற்காக போராடு வது மற்றும் அனைத்து வகையிலான சமூக ஒடுக்குமுறைகளை சமூக சீர்திருத்த இயக் கங்கள் வாயிலாக முடிவுக்கு கொண்டு வரு வது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதி ஆகும்.” என்ற சாதி அமைப்பு ஒழிப்பு  நோக்கிய பாதை குறித்த தெளிவை, புரிதலை, உந்துதலை இக்கட்டுரைகள் தருகின்றன.  குறிப்பாக “சாதி அமைப்பும் - மக்கள் ஜன நாயகத் திட்டமும்” என்ற கட்டுரை. சமூக மாற்றத்திற்கான தற்போதைய “மக்கள் ஜன நாயகக் கட்டமும்” சாதியமுறை ஒழிப்பும் எப்படி இரண்டறக் கலந்த ஒன்று என்பதை அழுத்தமாக அது விளக்குகிறது. 

வேர்களைத் தேடி

இந்நூலின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் அம்சம், சாதிஅமைப்பு பற்றிய வரலாற்று ரீதி யான சித்திரத்தை தந்திருப்பது. சாதியின் தோற் றம், பரிணாமம் பற்றி மிக எளிமையாக கட்டு ரைகள் விளக்குகின்றன. வருணாசிரமம், கோத்திரங்கள், கோத்திர சகோதரத்துவம், வர்ண சகோதரத்துவம், சாதிகள் உருவாக் கம், பஞ்சமர்கள், உட்சாதிகள், மதம், மனு தர்மம், தீண்டாமை என்று சமூக தளங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விளக்குகிற அதே நேரத்தில், இம் மாற்றங்கள் எப்படி பொரு ளியல் தளத்தில் சுரண்டல் முறைமைக்கு கச்சி தமாகப் பொருந்தியது என்பதை மிக அரு மையாக விளக்குகிறார். சாதி என்பது வெறும் மேற்கட்டுமானம் அல்ல, அது அடிக்கட்டு மானத்துடனும், அதாவது பொருளுற்பத்தி முறைமையின் உறவுகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விளக்குகிறார். டி.டி.கோசாம்பி, உள்ளிட்ட அறிஞர்களின் மேற்கோள்கள் மிக அருமையாகக் கையாளப் பட்டுள்ளன. 

சாதி அமைப்பு அப்படியே நிலைத்து நின்று விடவில்லை, மாறாக கடும் எதிர்ப்பிற்கு தொடர்ந்து ஆளாகி வந்துள்ளதையும், அத னால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் விவரித்தி ருப்பது நம்பிக்கை அளிக்கிற பதிவுகள்.  இரண்டாவது, சமூக சீர்திருத்த இயக்கங் கள் பற்றிய மதிப்பீடு. அவரது கட்டுரைகள் பல இடங்களில் அம்பேத்கர், பெரியார், ஜோதிபா பூலே உள்ளிட்ட சமூக சீர்திருத்த ஆளுமை களின் பங்களிப்பை கொண்டாடுகிறது. சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்பு சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட தளங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மூச்சுத் திணறி இருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயிர்க் காற்றை தந்தது என்பதை அழுத்தமாக பி.சம்பத் பதிவு செய்கிறார். அதே நேரத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் கடந்திருக்க வேண்டிய எல்லை கள் பற்றியும் ஆக்கப்பூர்வமான கருத்துக் களை, விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வர்க்க அரசியலற்ற சித்தாந்தங்களும், வர்க்க மும் சாதியும் ஊடாடுகிற உண்மையை புறந் தள்ளுகிற அணுகுமுறையும் விடியலுக்கு இட்டுச் செல்லாது என்பதை அழுத்தமாக முன் வைக்கிறார். 

“விடுதலைப் போராட்டக் காலத்தில் விடு தலை இயக்கமும் சமூக சீர்திருத்த இயக்கமும் இணைந்து செயல்படாமல் முரண்பட்டு நின்ற தால் இரண்டு இயக்கங்களுமே பலவீனப் பட்டன” - பி.டி. இரணதிவே இன்று வலதுசாரி திருப்பம் அரசியலில் நிகழ்ந்திருக்கிற சூழலில், நிறைய தலித் தலை வர்கள், தலித் மக்களில் சில பகுதியினர் “சமூக ஊட்டாட்டம்” (Social Engineering) என்ற உத்திக்கு இரையாக்கப்படும் அரசியல் சூழ லில் பொதுவுடமை - பெரியாரிய - அம்பேத்க ரிய சிந்தனையாளர்கள் இணைந்து நிற்க வேண்டிய புள்ளிகள் என்ன என்பதை பி.சம்பத் கட்டுரைகள் பொறுப்புணர்வோடு விவா திக்கின்றன. அதே நேரத்தில் நட்பு ரீதியான  விமர்சனங்களையும் கூர்மையாக முன்வைத் துள்ளார். 

பன்முக ஒடுக்குமுறை

மூன்றாவது அம்சம், எல்லா ஒடுக்குமுறை களும் ஒரு சேர எவ்வாறு ஆளும் வர்க்கங்க ளால் பயன்படுத்தப்படுகின்றன, வர்க்க - சாதி - பாலின ஒடுக்குமுறைகளுக்கான தொடர்பு பற்றி கட்டுரைகள் விவாதிக்கின்றன. ஒடுக்கு முறை எதிர்ப்பு இயக்கங்களே கூட ஒன்றை விடுத்து ஒன்றை எதிர்க்கிற சூழலில் ஒருங்கி ணைந்த அணுகுமுறைகளுக்கான வெளிச சத்தை இக்கட்டுரைகள் பாய்ச்சுகின்றன.  நான்காவது, டாக்டர் அம்பேத்கர் விளக்கிய “படி நிலைச் சமத்துவமின்மை” எவ்வாறு களத் தில் ஒடுக்கப்பட்ட சாதிகள் மத்தியில், அவர் களுக்காகப் பாடுபடுகிற இயக்கங்கள் மத்தி யிலேயே கூட வேறுபாடுகளை உருவாக்கு கின்றன, அத்தகைய பிரச்சனைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்று விளக்குகிற கட்டுரைகள் உள்ளன. அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டம் குறித்த கட்டுரை ஒரு  உதாரணம். உழைப்பாளி மக்களுக்கு இடை யேயான, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு இடையேயான பிரச்சனைகள் எவ்வாறு நட்பு ரீதியாக அதே நேரத்தில் கொள்கையில் சமரசமின்றி கையாளப்பட வேண்டுமென்ற தெளிவைத் தருகின்றன. இப்போதும் அருந்த தியர் உள் ஒதுக்கீடு பிரச்சனை உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் தேசம் முழுமையுமே மிகச் சரியான பார்வை தேவைப் படுகிறது. தமிழ்நாடு அனுபவம் அப்படியே இயந்திர கதியாக பொருந்துமா என்ற கேள்வி கள் இருந்தாலும் தமிழ்நாட்டின் பார்வை, கருத்தொற்றுமை உருவான பாங்கு, அதற்கு களத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் நிச்சயம் பகிரப்பட வேண்டும். அதை இந்நூல் கட்டுரைகள் செய்துள்ளன. 

களத்தில் கம்யூனிஸ்டுகள்

ஐந்தாவது, சாதி ஒடுக்குமுறை எதிர்ப்புக் களத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றியுள்ள பங்கு பற்றி கட்டுரைகள் பேசுகின்றன. கம்யூனிச இயக்கத்தின் முதல் ஆவணமான “செயல்பாட் டிற்கான மேடை” (Platform for Action) முன் வைக்கிற தீர்க்கமான பார்வை, வர்ணா ஸ்ரம தர்மத்திற்கு உட்பட்ட காந்தியப் பார்வை மீது அது வைக்கிற விமர்சனம் ஆகியன வியக்க வைக்கின்றன. கீழத் தஞ்சை, புன்னப்புரா வயலார், தெலுங்கானா, தேபகா, வோர்லி ஆகிய முத்திரை பதித்த கம்யூனிச இயக் கங்களின் போராட்டங்கள் எவ்வாறு வர்க்க ஒடுக்குமுறையையும், சாதிய ஒடுக்குமுறை யையும் ஒரு சேர எதிர்த்து வினை ஆற்றின என்ற அனுபவங்கள் முக்கியமானவை. “கீழத்தஞ்சை யின் கிழக்கு வானம்” கட்டுரை உணர்ச்சிப் பூர்வமாக அங்கு நடந்தேறிய பெரும் போராட்டத்தை நம் கண் முன்நிறுத்துகிறது.

1990களின் தென் மாவட்ட மோதல்கள் பற்றி அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என் சங்க ரய்யா விடுத்த அறிக்கை போற்றிப் பாது காக்கப்பட வேண்டிய ஆவணம். இவை எல்லாம் நூலில் உள்ளன.  ஆறாவது அம்சம், அம்பேத்கர், காந்தி, பாரதி, சிங்காரவேலர், சீனிவாசராவ் குறித்த கட்டுரைகள், விடுதலைப் போராட்டக் காலத் தில் சமூகம் சார்ந்த “இந்தியாவின் கனவு” (Idea of India) எவ்வாறு பன்மைத்துவ உள்ள டக்கத்தோடு மலர்ந்தது என்பதை நமக்கு  எடுத்துரைப்பதாகும். அரசியல் சுதந்திரம் என்ற  “ஒற்றைக் கனவு” (Idea of Homogeneity) இந்திய தொழிலதிபர்களால் தேசிய இயக் கத்தின் நிகழ்ச்சி நிரலில் திணிக்கப்பட்டு இருந்த காலத்தில், பல்வேறு வர்க்கங்களின், சமூகக் குழுக்களின் வேறுபட்ட தேவைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் எவ்வாறு பன்முக உள்ளடக்கம் கொண்ட “இந்தியாவின் கன வாக” உருவெடுத்தது என்பதை இந்த ஆளு மைகளின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன. காந்தி சனாதனிகளின் எதிரியாக கருதப்பட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்து மகாத்மாவின் சீரிய நேர்மறை பங்களிப்பை அழுத்தமாகச் சுட்டுகிறார். டாக்டர் அம்பேத்கர் காந்தியுடன் வேறுபட்ட சூழல் பற்றி மார்க்சிய அறிஞர் பி. பி. சான்ஸ்கிரி யின் ஆழமான பார்வை இதில் இடம் பெற்றுள் ளது.  மகாத்மா காந்திக்கு 25.05.1921 இல் சிங்காரவேலர் எழுதிய கடிதம் வரலாற்று பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. “20 கோடி மக்களின் அவலம் தீராமல் சுய ராஜ்யப் போராட்டம் நன்மை பயக்காது. நாம் விரும்புவது உண்மையான சுதந்திரம். அதனு டைய மாயை அன்று” என்ற தலித்துகளின் விடு தலையை இணைத்தது என்பது இன்று வரை வழி காட்டும் கலங்கரை விளக்கம். 

தீ.ஒ.மு.வின் 13 ஆண்டு பயணம்

ஏழாவது அம்சம், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் 13 ஆண்டு கால செயல்பாடுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடு கள் பற்றிய விரிவான கட்டுரைகள். எத்தனை களங்கள்! எத்தனை வகை தீண்டாமைகள்! பொதுச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கு கிற முன்முயற்சிகள்! சாதி ஆதிக்க சக்திகளை தனிமைப்படுத்தி ஜனநாயக உள்ளம் கொண்ட எல்லா சாதி உழைப்பாளிகளையும் களத்திற்கு கொண்டு வந்தது, குறிப்பிடத்தக்க தீர்வுகளை எட்டியது, எல்லா ஒடுக்கப்பட்ட அமைப்பு களும் ஏற்கத்தக்க அமைப்பாக தீ.ஒ.மு அங்கீ காரம் பெற்றுள்ளதுமான அனுபவங்களை நிறைய கள உதாரணங்கள் வாயிலாக விளக்கு கிறார்.  கள ஆய்வுகள், வன்கொடுமை தீண்டா மைக்கு எதிரான நேரடி நடவடிக்கைகள், பஞ்சமி நில மீட்பு, தலித் கிறித்தவர் உரிமை, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தொடர் இயக்கங்கள் - பாதிக்கப்பட்டோர்க்கு நீதி கிட்ட போராட்டங்கள், எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்கள் ஆகிய தளங்களில் தீ.ஒ.மு ஆற்றியுள்ள பணிகள் நன்கு தொகுக் கப்பட்டுள்ளன.  சாதி வேறுபாடுகள் கடந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் களம் இறங்கிய தூத்துக்குடி மாவட்ட கிராமத்தின் நிகழ்வு ஒன்று மிக அருமையாக “நக்கீரன்” இதழில் இருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தலித் மக்க ளுக்கு சிகை திருத்த உரிமை, சலூனில் மறுக் கப்படுவதை எதிர்த்த போராட்டத்தில் “சொந்த” சாதி ஆதிக்க மனோபாவத்தை எதிர்த்து நின்ற கம்யூனிஸ்டுகள் ஊர் விலக்கம் செய்யப்பட்டனர். இப்படி நிறைய உதா ரணங்கள் இடம் பெற பக்கங்களின் அளவு இடம் கொடுத்திருக்காது.  எட்டாவது அம்சம், சமகால அரசியல் சர்ச்சைகள் அதற்கான விவாதங்களும் இந்த நூலில் உள்ளன. அதிமுக அமைச்சர்கள், டாக்டர் இராமதாஸ், புனித முரசு ஆசிரியர்  புனித பாண்டியன் ஆகியோரின் கருத்துக்க ளுக்கு எதிர்வினை ஆற்றிய பதிவுகள் அவை.  ஆட்சியாளர்களின் தேர்தல் வங்கி அரசியல், தலித் எதிர்ப்பு திரட்டல், தலித் அரசியல் என்ற பெயரில் இடதுசாரி எதிர்ப்பை பொழிதல் ஆகிய போக்குகளையும், அது குறித்த தெளி வான பார்வையையும் முன் வைக்கின்றன. 

பெருங்கற்கோட்டையாய் சாதி

ஒன்பதாவது, உத்தப்புரம் தீண்டாமை சுவர் இடிப்பு, தர்மபுரி கிராமங்கள் எரிப்பு ஆகிய குறிப்பிடத்தக்க தலையீடுகளின் அனு பவங்கள் பேசப்பட்டுள்ளன. நியாயப்படுத்த இயலாத சாதிய வடிவங்கள், பெருங்கொடு மைகள் ஆகியவற்றை இந்தியாவின் வரை படத்தில் சிறு புள்ளிகளாக கூடத் தெரியாத சின்னக் கிராமங்களில் எதிர்கொள்வதற்கே இவ்வளவு நேரமும், பெரு முயற்சியும் தேவைப்படுகிறது என்றால் எவ்வளவு பிரம் மாண்டமான கற்கோட்டையாக சாதி நிலை பெற்றுள்ளது, அதைத் தகர்க்க எவ்வளவு நெடிய பயணம், விரிந்த ஒற்றுமை தேவை என்பதை சம்பத் அவர்களின் பகிர்வுகள் உணர்த்துகின்றன.  கடைசியாக, ஆவணமாக்கலில் இடதுசாரி கள் கவனம் அற்றவர்கள் என்ற பொதுவான விமர்சனம் உண்டு. அது முழுமையாக ஏற் கத்தக்கது இல்லையென்றாலும் இடைவெளி கள் உண்டு. அதை நிரப்ப இந்நூல் போன்ற முயற்சிகள் உதவும். இந்த நூல் மீது விமர்சனங்கள் எழுவது இயல்பு. இந்த நூலின் சில கருத்துக்கள் ஆழ மான விவாதத்திற்கும் உரியவை. மார்க்சிய அணுகுமுறை என்பது அத்தகைய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்ப தும், தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்வதாகவுமே இருக்கும்.  வாசிக்க வேண்டிய நூல். கள செயற்பாட் டாளர்கள் கைகளில் தவழ வேண்டிய ஆவ ணம். வர்க்க - சாதி ஒடுக்குமுறையை ஒரு சேர எதிர்கொள்ள வேண்டிய கடமையை உணர்த்துகிற கையேடு.