மதுரை;
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை டிசம்பருக்கு அடுத்து திறக்கலாம் என்று யர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் உள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகள்,விடுதிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தாக்கத்தால் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. நவம்பர்16 முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என முதல்கட்ட அறிவிப்பும் ,பின்னர் விடுதிகள் திறக்கப்படும் என இரண்டாம் கட்ட அறிவிப்பும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகளைதிறப்பது மாணவ- மாணவிகளுக்கு வைரஸ் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதனால் மாணவ மாணவிகளிடம் இருந்து பொது மக்களுக்கும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொ
ரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே நவம்பர் 16 ம் தேதிமுதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை புதனன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், நீதிபதிகளே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு மேல் திறக்கலாம். அருகில் உள்ள நிலங்களின் நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது .அதிகப்படியான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றே கூறி வருகின்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.