கோவை, மார்ச் 28- பொது வேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் பேருந்துகள் 98 சதவிகிதம் இயங்காமல் பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோவை கோட்டத்தில் இயங்கும் 1470 அரசு பேருந்து களில், 20க்கும் குறைவான பேருந்துகளே இயங்கியது. இதேபோன்று கோவை மாவட்டத்தில் சுமார் 80 சதவிகித ஆட்டோக்கள் இயங்கவில்லை. அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படாத நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. இருப்பினும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் தங்களது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினர்.