tamilnadu

img

8 ஆண்டில் ரூ. 26 லட்சம் கோடி

சென்னை, ஏப். 4- ஒன்றிய பாஜக அரசின் கடுமை யான கலால் வரி உயர்வால் அவதிப் படுவது ஏழை, எளிய, உழைப்பாளி மக்களே என சென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.பால கிருஷ்ணன் குற்றம் சாட்டினார். பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு, சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழு வதும் 500 மையங்களில் திங்க ளன்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை குறளகம் அருகே மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இரா.முரளி, சர்வேஸ்வரன், சி.திருவேட்டை, தனலட்சுமி, துறைமுகம் பகுதிச் செய லாளர் ஜலால், எம்.வி.கிருஷ்ணன் (சிறுகடை வியாபாரிகள் சங்கம்), அருண்குமார் (சுமைப்பணி தொழி லாளர் சங்கம்) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீது கடு மையான வரி விதிப்பதால் தினசரி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. 5 மாநில தேர்தல் நிறைவடைந்த பிறகு இது வரை 12 நாட்களில் 10 முறை விலை  உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கும் சூழ்நிலை யிலும், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வாங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் இந்தியாவில்தினசரி  விலை உயர்ந்து கொண்டிருக்கிறது என்றால், மோடி அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது  கலால் வரியை உயர்த்தியதும், மானியங்களைக் குறைத்ததுமே காரணம். ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய்க்கு விலை உயர்ந்துள் ளது, டீசல் 100 ரூபாயைத் தொட்டுவிட்டது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 960 ரூபாய். வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விலை 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்வதற்கு பெட்ரோல், டீசல், சுங்கக் கட்டணம் உயர்வே காரணம். 

கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் 26 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அரசு வருவாய் ஈட்டி யுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 51 ஆயிரம் கோடி கலால் வரியாக மக்களிடம் இருந்து பறிக்கப் பட்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய, உழைப்பாளி மக்களி டம் கொள்ளையடித்து, அரசு கஜானாவிற்கு பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அம்பானி, அதானி வங்கியில் கடனாகப் பெற்ற 9 லட்சம் கோடி ரூபாயை வசூல் செய்வதற்கு பதில்  வராக் கடன் என தள்ளுபடி செய்துள்ளது. மேலும் பல லட்ச  ரூபாய் வரியையும் தள்ளுபடி செய்திருக்கிறது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீது  கலால் வரியை உயர்த்தும் மோடி அரசு, கார்ப்பரேட் நிறு வனங்களுக்கான வரியை குறைக்கிறது. இந்த அரசு ஏழை, எளிய, உழைப்பாளி மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் ஆட்சியாக மோடி அரசு உள்ளது. 

தமிழகத்தில் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கக் கட்டண உயர்வு, மருந்து பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மாநில அளவிலான போராட்டத்தை நடத்துவோம். இலங்கை அரசு  தமிழ் மக்களை ஒடுக்கி அழித்தது; பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. இன்றைக்கு அங்கே பொருளாதாரம் திவாலாகிப் போனது. அப்படிப் பட்ட நிலைக்கு இந்தியாவும் தள்ளப்பட்டிருக்கிறது. அங்கே சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் ஒடுக்கப் பட்டார்கள் என்றால்,  இந்தியாவில் பெரும்பான்மை மதவா தத்தைத் தூண்டிவிட்டு சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிற நிலையை ஒன்றிய பாஜக அரசு மேற் கொள்வதால் இங்கேயும் பொருளாதாரம் சீரழிந்து திவா லாகும் நிலை ஏற்படும்.  எனவே தமிழக மக்கள் இதற்கெதிராக போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.