tamilnadu

img

உப்பு இறக்குமதி

உப்பு இறக்குமதி

தூத்துக்குடி: இந்தி யாவில் குஜராத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதி களவு உப்பு உற்பத்தி செய் யப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்தியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். இந் தாண்டு முற்பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி  பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், குஜராத்தில் இருந்து கப்பல்களிலும், சரக்கு ரயில்கள் மூலமாக வும் உப்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 3 லட்சம் டன் வரை உப்பு இறக்குமதி செய்யப் பட்டு விற்பனை செய்யப் பட்டதாக உப்பு வர்த்தகர் கள் தெரிவித்துள்ளனர்.