tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தை தனியாக செயல்படுத்துக: பேரவை கோரிக்கை

ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தை  தனியாக செயல்படுத்துக: பேரவை கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 15-  திருச்சிராப்பள்ளி புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யு ஆட்டோ தொழிலாளர் சங்க 6 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் வியாழனன்று, சமயபுரம் டோல் பிளாசா அருகில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் நவமணி தலைமை வகித்தார். வளன் ஜெயபிரகாஷ் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை பகுதிச் செயலாளர் மணிகண்டன் வாசித்தார். சி.ஐ.டி.யு திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை சங்க மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் சம்பத் சமர்பித்தார்.  கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தை தனியாக செயல்படுத்த வேண்டும். விலைவாசி உயர்விற்கேற்ப மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக பி.சந்திரசேகர், செயலாளராக ஏ.கனகராஜ், பொருளாளராக எஸ். சம்பத், அமைப்பு செயலாளராக கே. நவமணி, துணைத் தலைவர்களாக தண்டபாணி, கார்த்திகேயன், அழகேசன், ரமேஷ், குமரேசன், துணை செயலாளர்களாக தங்கதுரை, அமீர் உள்பட 13 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஆட்டோ சம்மேளன மாநிலச் செயலாளர் சிவாஜி நிறைவுரையாற்றினார்.