tamilnadu

பழங்குடியினருக்கு இனச்சான்று வழங்குவதில் அரசாணை 104-ஐ அமல்படுத்திடச் செய்திடுக!

பழங்குடியினருக்கு இனச்சான்று வழங்குவதில் அரசாணை 104-ஐ அமல்படுத்திடச் செய்திடுக!

தலைமைச் செயலாளரிடம் மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.26 - தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருட காலமாக பழங்குடியினத்தவர்களுக்கான இனச்சான்றிதழ் வழங்குவதில் மிகப்பெரிய  பின்னடைவும், திட்டமிட்டே மெய்த்தன்மை அறிவது என்று பல்லாயிரக் கணக்கான வர்களை அலைக்கழிப்பது - ரத்து செய்வது  என்றும் தொடரும் பழங்குடியினர் மீதான  வருவாய்த் துறையினரின் நடவடிக்கை களை பரிசீலித்திட வேண்டும். தமிழ்நாடு அரசு ஆணை 104-ஐ  அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்திட வேண்டும் என்றும் மலைவாழ் மக்கள் சங்கம்  தமிழ்நாடு தலைமைச் செயலாளரை வலி யுறுத்தியது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்  மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் கொண்டாரெட்டீஸ் பழங்குடி சங்கத்தின் தலைவர்கள் தலை மைச் செயலாளரை செவ்வாயன்று நேரில்  சந்தித்து மனு அளித்துப் பேசினர். கோரிக்கை கள் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியினத்த வர்களுக்கு, இனச்சான்று வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகளும், பெரும்பாலான வருவாய் கோட்டாட்சியர்கள், சாராட்சியர் கள் சமீப காலமாக திட்டமிட்டே பழங்குடி மக்களை பழிவாங்கும் நோக்கத்துடன் சான்றி தழ் வழங்க மறுத்து வருகின்றனர். பழங்குடியினர் இனச்சான்றிதழ் வழங்கு வது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் வழி காட்டு நெறிமுறைகளுடன், தமிழ்நாடு அரசு  ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை  கடந்த 21.08.2023 தேதியன்று அரசாணை எண் 104 வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின்ன ரும், தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் காட்டுநாயக்கன், கொண்டா ரெட்டீஸ், மலைவேடன், குருமன்ஸ் மற்றும்  மலைக்குறவன் ஆகிய பழங்குடி இனத்த வர்களுக்கு, பெற்றோர்களுக்கு இனச் சான்று இருப்பின் அவர்களது பிள்ளை களுக்கு வழங்கிட மறுக்கின்றனர். மறுபுறம் - மெய்த்தன்மை அறிதல் என்ற  பெயரில் அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்று  10, 20 வருடங்களை கடந்த பின்னர், குறிப்பாக  மேட்டூர் - கொளத்தூர் பகுதிகளில் - பழங்குடி  ஊழியர்களை பணியாற்றுபவர்களை அலைக் கழித்திட வைப்பதும், அவமரியாதையுடன் நடந்து கொள்வதும் தொடர்கின்றது. காவல் துறையின் விசாரணை மிரட்டலாகவே, பொதுவெளியில், அலுவலகங்களில் அனை வரின் முன்பாகவே, மிகவும் இழிவுபடுத்தி டும் வகையிலேயே நடக்கிறது. மேலும் சமீபகாலமாக, மானுடவியல் துறையின் “குழுக்கள்” (Committee) அமைத்து, காட்டுநாயக்கன், கொண்டா ரெட்டீஸ், மலைவேடன் போன்ற பழங்குடியி னங்களை 1950 இந்திய பாராளுமன்ற திருத்தச் சட்டம், மாண்புமிகு ஜனாதிபதி அவர் களால் ஒப்புதல் அளித்து அரசின் வெளி யீடுகளில் வெளியிட்டு 75 ஆண்டுகள் ஆன  பின்பும், பழங்குடி இன, சமூக இன குழுக்கள்  குறித்து ஒட்டுமொத்த விசாரணை செய்திடு வது பொருத்தமானதல்ல.  தனி ஒருவர் குறித்த பிரச்சனையில் அவரை மட்டுமே விசாரணை செய்வது தான்  சரியாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில்  ஒட்டு மொத்தமான இனக் குழுக்களையே விசாரணை செய்கின்றனர். இதனால்  தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மாணாக்கர்களின் கல்வி, மேல் படிப்பும் பாதிக்கப்படுவதுடன், வேலை  வாய்ப்பும் பறிபோகின்றது. மேலும் அவ்வப் போது அரசின் பழங்குடியினருக்கான திட்டங்களை இவர்களால் பெற முடியாமல் போகின்றது. பழங்குடியினருக்கான இனச் சான்று பெறுவதில் மேலும் இணையவழி (ஆன்லைன்) முறையில் விண்ணப்பித்திடும் முறையை மாற்றி நேரிடையாகவே மனு  அளித்திடும் முறையை மீண்டும் அமல் படுத்திட வேண்டுகிறோம். எனவே தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசாணை எண் 104-ஐ மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து அமல்படுத்திடவும் வரும் கல்வி யாண்டிற்கு முன்னதாக, பழங்குடியினர் இனச்சான்றிதழ், விரைந்து கிடைத்திட ஆவண செய்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.